வெள்ளி, டிசம்பர் 9

கடவுளின் மரணம் - ஆதவன் தீட்சண்யா

யிரங்காலத்துச் சேறோடு
நான் உள் நுழைந்தபோது
உச்சிப்பொட்டில் ஒரேசாத்தில் வீழ்த்தப்பட்ட மாடாக
தனித்து மரித்து அநாதையாய்க் கிடந்தார் கடவுள்

உலகத்திற்கான கடைசிச்செய்தி எதையுமே கூறாமல்
ஆவென பிளந்திருந்த வாயில்
அண்டசராசரம் ஏதும் தெரியவில்லை.

ஆதியந்தமற்றவரென அறியப்பட்டிருந்ததால்
பிணமாயிருப்பது கடவுளாயிருக்க முடியாதென்று விசாரித்ததில்
எல்லாத்திசைகளிலும் கடவுள்
ஏற்கனவே இறந்துவிட்டிருந்தது தெரிந்தது

இங்கேயும்
புரோகிதச்சூதினால் முதன்முறையாகவும்
புஷ்யமித்திர சுங்கனின் வஞ்சகத்தால் மறுமுறையும்
கொல்லப்பட்ட விபரமே தெரியாமல்
எதற்குமே உதவாத அந்தச் சனியனை
இத்தனைக்காலம் சுமந்ததே போதுமென்று
நியாயத்தின் சூட்சும வலுவால்
நான்தான் இறுதியாய் கொன்றேன் என்பது மட்டும்
இன்னும் என் ஞாபகத்திற்கு வரவேயில்லை.

1 கருத்து:

  1. ஆக்கம் நன்றாக உள்ளது.
    பகிர்வுக்கு நன்றி ஆதவன் தீட்சண்யா.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...