திங்கள், டிசம்பர் 12

காமதேனு- ஆதவன் தீட்சண்யா


கொன்ற மாடுகளின் ஆவிகள் கொம்பாட்டின கனவில்
சாந்தப்படுத்த
தெய்மாக்கினர் அவைகளை
வெட்டித் தின்பதில்லை என்றானாலும்
மறக்க முடியுமா மாட்டுரத்தத்தின் ருசியை
பாலாய் தயிராய் நெய்யாய் உறிஞ்சும்
புதுமோசடி புரியாமல்
மூத்திரத்திற்கும் கோமியத்திற்குமான அர்த்தக்குழப்பத்தில்
செத்து நாறுகிறது புனிதப்பசு.

தாயோ தந்தையோ தலைவனோ தொண்டனோ
உயிர் பிரிந்த கணத்திலேயே
ஊத்தைப் பிணமென்றாகிவிட
பசு மட்டுமே
செத்தப்பின்னும் புனிதமாயிருக்கிறது சிலருக்கு
கண்காணியுங்கள் அவர்களை
இன்னும் மடிமுட்டிக்கொண்டிருக்கிறார்களா
பில்ட்டர் காபிக்காகவென்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...