வியாழன், ஜனவரி 19

நியதி- ஆதவன் தீட்சண்யா

குழிக்குள் சவம்
குனிந்தேன் கடைசியாய் பார்க்க

பிணம் கெக்கலியிட்டது:
எனக்கேனும் இந்த இடம்
உனக்கு...?

ஆழத்தின் ஆழத்திலிருந்து இன்னொரு குரல்:
என்மீது யார் படுத்திருப்பதையும் அனுமதிக்கமுடியாது
எழுந்திரு

அச்சத்தில்
அவசரமாய் குழிதூர்த்து நிமிர்ந்தேன்
அதோ
மகனின் கொள்ளிச்சட்டியோடும்
கொள்ளுப்பேரன்களின் நெய்ப்பந்தங்களோடும்
பிணங்களின் நீளும் வருகை

அழவேண்டியிருக்கிறதே என்ற துக்கத்தில்
சுடலையின் எல்லையில் சில பெண்களும்

பாவம்
வெட்டியானுக்கும் மருத்துவச்சிக்கும்
விடுமுறையே கிடையாது.



1 கருத்து:

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...