குழிக்குள் சவம்
குனிந்தேன் கடைசியாய் பார்க்க
பிணம் கெக்கலியிட்டது:
எனக்கேனும் இந்த இடம்
உனக்கு...?
ஆழத்தின் ஆழத்திலிருந்து இன்னொரு குரல்:
என்மீது யார் படுத்திருப்பதையும் அனுமதிக்கமுடியாது
எழுந்திரு
அச்சத்தில்
அவசரமாய் குழிதூர்த்து நிமிர்ந்தேன்
அதோ
மகனின் கொள்ளிச்சட்டியோடும்
கொள்ளுப்பேரன்களின் நெய்ப்பந்தங்களோடும்
பிணங்களின் நீளும் வருகை
அழவேண்டியிருக்கிறதே என்ற துக்கத்தில்
சுடலையின் எல்லையில் சில பெண்களும்
பாவம்
வெட்டியானுக்கும் மருத்துவச்சிக்கும்
விடுமுறையே கிடையாது.
குனிந்தேன் கடைசியாய் பார்க்க
பிணம் கெக்கலியிட்டது:
எனக்கேனும் இந்த இடம்
உனக்கு...?
ஆழத்தின் ஆழத்திலிருந்து இன்னொரு குரல்:
என்மீது யார் படுத்திருப்பதையும் அனுமதிக்கமுடியாது
எழுந்திரு
அச்சத்தில்
அவசரமாய் குழிதூர்த்து நிமிர்ந்தேன்
அதோ
மகனின் கொள்ளிச்சட்டியோடும்
கொள்ளுப்பேரன்களின் நெய்ப்பந்தங்களோடும்
பிணங்களின் நீளும் வருகை
அழவேண்டியிருக்கிறதே என்ற துக்கத்தில்
சுடலையின் எல்லையில் சில பெண்களும்
பாவம்
வெட்டியானுக்கும் மருத்துவச்சிக்கும்
விடுமுறையே கிடையாது.
இந்த மாற்றம் உலக நீதியாகும்
பதிலளிநீக்குஅருமை