சனி, நவம்பர் 29

என்னத்த சொல்றது...

பெயரிலே என்ன இருக்கிறது என்பார்கள். ஆனால் அதில்தான் எல்லாம் இருக்கிறது என்று மாற்றிக்கொள்ளத் துடிப்பவர்களும் அதைத் தடுப்பவர்களும் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை அறியும்போது நகைப்பாகத்தான் இருக்கிறது. பெயரைக்கூட பகிர்ந்துகொள்ளத் தயாரில்லாத இவர்களில் சிலர்தான் கொஞ்சநாட்களுக்கு முன்பு அனைத்து சமுதாயப் பேரவை, தலித்தல்லாதார் கூட்டமைப்பு என்கிற பெயரில் உலாவந்தன்னர் என்பது அதைவிடவும் நகைப்புக்குரியது.
- ஆதவன் தீட்சண்யா

 ஏன்டா ஏதற்கெடுத்தாலும், வேளாளர்கள் கழுத்த அறுக்கிறீங்க! “சூரியகுல வேளாளர்” என புதுசா ஒருத்தன் கௌம்பீட்டான்டா...

சலவையாளர், மடிவாலா, ரஜகா, டோபி போன்ற பெயர்களில் சாதிச்சான்றிதழ்கள் சார்ந்து வந்தவர்கள் கோவை மற்றும் திருப்பூர்  மாவட்ட சூரிய வேளாளர் அறக்கட்டளை என்ற பெயரில் உள்ள அமைப்பினர் கோவை அருகில் உள்ள சோமனூரில் சில தினங்களுக்கு முன்னர் விழா ஒன்றை நடத்தினர். அவ்விழாவில் தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில், தாங்கள் சூரியனை நம்பியே தொழில் செய்வதாலும், கம்பராமாயணத்திலும், விக்கிரமாதித்தன் ஆட்சிக்காலத்திலும் இருந்ததைப் போலவே சூரியகுல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என கோரிக்கையை நிறைவேற்றக்கோரி,  “சூரியகுல வேளாளர்” என்று அரசு பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த அக்கப்போரை முழுமையாக வாசிக்க:
http://www.velaler.com/index.php/world/articles/exclusive-articles/1328-secular-caste-112014#.VHkkA2czaqI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...