சனி, மார்ச் 5

தணிக்கை - ஆதவன் தீட்சண்யா

‘மனதுக்குப் பட்டதை எழுதுவேன்’ எனத் தொடங்கியது
எழுத்தாளருடைய மிக நீண்ட வாக்குமூலம்

இடநெருக்கடியின் காரணத்தால்
வெட்டிக்குறைக்கப்பட்ட அதன் இரண்டாம் வரி:
‘யார் மனசும் புண்படும்படியாய் எழுதமாட்டேன்’

வாக்கிய நீளத்தையும் சுருக்கி
வாக்குமூலம் இவ்வாறாக முடித்துவைக்கப்பட்டது
‘எழுதமாட்டேன்’

பிறகென்ன, போடுங்கள்
சுபம் / சவம்.

நன்றி: புதியவிதி 28.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...