திங்கள், ஆகஸ்ட் 29
வெள்ளி, ஆகஸ்ட் 26
வேளைக்கொரு வானூர்தியில் பிரதமர் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லை - ஆதவன் தீட்சண்யா
இன்றைய அதிகாலை அந்த காணொளிக்காட்சியோடு
எனக்கு விடிந்திருக்கக்கூடாது. விவரிக்கவியலாத அவமானத்திற்கும் உளைச்சலுக்கும் ஆளாகிப்போனேன்.
அதுவும் இளைப்பாறிக் கொள்வதற்காக சாலையோரம் இறக்கிவைத்திருந்த தன் அம்மாவின் சடலத்தை
அப்பா தூக்கும் போது அந்தச் சிறுமியின் அழுகையைக் கண்ட பிறகு எதுவொன்றையும் செய்வதற்கு
மனமொட்டாது இறுகிப்போய் கிடந்தேன். அந்தச்
சிறுமியின் கண்ணீர் அப்படியே பெருக்கெடுத்து இந்த நாட்டையே மூழ்கடித்துவிட்டால்தான்
என்ன என்று தோன்றியது. ஆனால் உணர்ச்சிவசப்பட்டு நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் போல
வாழ்க்கை அவ்வளவு வீராவேசத்தோடு இருப்பதில்லை என்று அந்தச் சிறுமி உணர்ந்திருக்கிறாள்.
அதனால்தான் அவள் தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக்கொண்டு பொதிகளை தூக்கிக்கொண்டு அம்மாவின்
இறுதிப்பயணத்தில் உடன் சென்றுகொண்டிருக்கிறாள்.
பணம் இல்லை என்பதற்காக ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்ட
நிலையில் தனது மனைவியின் சடலத்தை போர்வையால் சுற்றியெடுத்துக்கொண்டு அந்த மனிதனின்
10 கிலோமீட்டர் தாண்டும் வரையிலும் ஒருவர்கூட அவர்களைப் பார்த்திருக்கவேமாட்டார்களா?
ஒடிஷாவில் அவ்வளவுபேரும் செத்தா போனார்கள்?
இந்த நாட்டின் பிரதமர் வேளைக்கொரு வானூர்தியில் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ
அமரர் ஊர்தி கூட இல்லாமல் போனது ஏன் என்கிற கேள்வியை யாரிடம்தான் கேட்பது? இப்படியெல்லாம்
பினாத்திக்கொண்டே ஒசூர் அரசு மருத்துவமனைக்குப் போனவன் அங்கிருந்த நண்பர் ஒருவரிடம்
ஆற்றமாட்டாத துயரோடு இவ்விசயத்தைச் சொல்லி அவரையும் துயரப்படுத்திவிட்டேன். அரசு மருத்துவமனை
ஊழியர்கள் சிலர் சாமானியர்களிடம் காட்டும் அலட்சியமும் அரசாங்கத்தின் பொறுப்பின்மையும்
இப்படியான அவலங்களை உருவாக்கிவிடுவதாக சொன்ன அவர், பின்வரும் முக்கியமான தகவலொன்றை
கூறினார். அதாவது தமிழ்நாட்டில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனளிக்காமல் யாரும்
இறந்துபோனால் அவர்களது உறவினர் சொல்லும் இடத்திற்கு
சடலத்தைக் கொண்டுபோய் ஒப்படைத்துவிட்டுவர அமரர் ஊர்தி இலவசமாக தரப்படுகிறது. மாநிலத்தின்
எந்தப்பகுதியாக எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் - அண்டை மாநிலமாக இருந்தாலும் - ஒரு
பைசா செலவில்லாமல் இறந்தவரை கொண்டு சேர்க்கும் பொறுப்பு அரசுடையதாக இருக்கிறது - என்று
அவர் சொன்னது சற்றே ஆறுதலாக இருந்தது.
பிறகு வந்து இணையத்தில் அதுகுறித்து
தேடிப் பார்த்த போது , 2010 ஆம் ஆண்டு மக்கள் நலவாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான
விவாதத்துக்குப் பதிலளித்தப் பேசிய அப்போதைய தி.மு.க. அரசின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
தான் அப்படியயொரு திட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். 2011ல் திருநெல்வேலி
அரசு பொது மருத்துவமனையில் தமிழகத்திலேயே முதன்முறையாக இலவச அமரர் ஊர்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக
செய்திகள் கிடைத்தன. தமிழக சுகாதார திட்டப்பணிகள் மற்றும்
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் இந்த வாகனம் ஏற்பாடு செய்யப்படுகிறது . இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இத்திட்டம் அமலில் இருப்பதாகவும்
தெரிய வருகிறது. 155377 என்கிற இலவச எண்ணுக்கு அழைத்தால், விவரங்களைக் கேட்டுக்கொண்டு,
‘யாருக்கும் எதற்காகவும் ஒரு பைசா தரவேண்டாம்.. மீறி கேட்டால் இதே எண்ணில் கூப்பிட்டு
புகாரளியுங்கள்’ என்று நம்பிக்கை ஊட்டுகிறார்கள். அது சரி, இதெல்லாம் ஒடிஷாவில் செல்லுபடியாகாதா?
புதன், ஆகஸ்ட் 10
நரகல் நாறுதேன்னா நக்கிப் பார்த்துட்டுச் சொல் என்கிறார்கள் - ஆதவன் தீட்சண்யா
ரங்கநாயகம்மா என்பவர் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை என்கிற நூலை எழுதியிருப்பதாக நண்பர் வெய்யில் சொல்லும் வரை, ரங்கநாயகம்மா என்பவரை நான் அறிந்திருக்கவில்லை. அவரை அறிந்து கொண்டேயாகவேண்டும் என்கிற தனித்தத் தேவை ஏதும் நமக்கில்லை. எவ்வாய் எப்பொருள் செப்பினும் அவ்வாயின் சாதியைக் காண்பதும் அறிவு என்பதால் இணையத்தில் தேடி அவரைப் பற்றி படித்துக்கொண்டிருந்த வேளையில்தான் ‘ரஜினி நடித்தப் படத்தில் வேலை செய்ததாலேயே ரஜினியை அம்பேத்கருக்கு அடுத்தத் தலைவராக ஏற்றிருப்பவர் என வசுமித்ர007 புலனாய்வில் கண்டறியப்பட்ட அதியன் ஆதிரை’ மூலம் புத்தகம் வந்து சேர்ந்தது. ( புத்தகத்தை டெலிவரி செய்த கூரியர் தொழிலாளிக்கு யார் தலைவர் என்கிற ரகசியமும் விரைவில் அம்பலமாகக்கூடும்)
புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த
போதே அது குறித்த பதிவொன்றை எனது வலைத் தளத்தில் எழுதியிருந்தேன். ‘நாம எது சொன்னாலும்
கேட்டுக்கணும், எதை எழுதினாலும் படிக்கணும்கிறது தானே ஊர்வழக்கம், அதற்கு மாறாக இவனென்ன
கருத்து சொல்லக் கிளம்பியிருக்கிறான்’ என்று மொழிபெயர்ப்பாளர் தரப்பு கடுப்பாகிவிட்டது
போல. முழுதாகப் படிக்காமல் இப்படி எழுதுவது சரியா நெறியா என்றெல்லாம் ஆவேசப்படுகிறார்கள்.
நாலாம் பக்கத்தில் இருக்கிற தவறைச் சுட்டிக்காட்ட நானூற்றுச் சொச்சம் பக்கங்களையும் படித்துத் தானாக
வேண்டும் என்று நிபந்தனை போடும் அவர்கள், அதற்கு உட்படாமல் அபிப்பிராயம் சொல்லுகிற உனக்கு ஒரு நூலை எப்படி படிக்கவேண்டும் என்பதே தெரியவில்லை என்று தீர்ப்பு சொல்கிறார்கள். ஆதவனுக்கு எழுதவே தெரியாது என்றொரு தீர்ப்பு போன வாரம் வெளியானது, இந்த வாரம் படிக்கவே தெரியலே என்று. வாராவாரம் வசைபட வாழ்கிறேன்.
விமர்சனம் என்றால் அது அறிவுப்பூர்வமாக
இருக்கவேண்டும், ஆனால் அது ஆதவனுக்கு இருக்க வாய்ப்பே இல்லை என்று அறிவிக்கும் கொற்றவை,
அதற்கான வரலாற்றுக் காரணத்தை கண்டறிகிறார். ‘...அம்பேத்கர் உங்களுக்கு அப்படி வழிகாட்ட
முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. ஏனென்றால், எதையும் ஒழுங்காகப் படிக்காமல்,
அவசரகதியில் முன்முடிவுக்கு வந்து கண்மூடித்தனமாக நிராகரிக்கும் போக்கை அவர் கொண்டிருந்தார்.
அதனால்தான் மார்க்சியம் குறித்து எதையும் படிக்காமலேயே அதுபற்றிய முடிவுக்கு வந்தார்.
அதேபோல் நீங்களும் புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல் பதிவு எழுதியிருக்கிறீர்கள்.
உண்மையில், நீங்கள் அவரிடமிருந்து அதை மட்டுமே கற்றுக்கொண்டுள்ளீர்கள் போலும்!’.
புரிகிறதா, ஆதவன் இப்படி அரைகுறையாக இருப்பதற்கு காரணம், அம்பேத்கர் என்கிற அரைகுறையைப் பின்தொடர்வதுதான். அதாவது ‘உங்களுக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் அறிவு வராது’ என்பதுதான் கொற்றவை சொல்லவரும் விசயம். கொற்றவையைப் போல நிறையறிவோடு இருப்பதற்கு குறைந்தபட்சம் அவரது சாதியில் பிறந்திருப்பது கட்டாயம் போல. ஒரு பறப்பயலா பிறந்துட்டு என்று சொல்லத் துடிக்கும் ஆத்திரத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு ‘தலித்தாய் பிறந்ததாலேயே’, ‘பிறப்பால் நீங்கள் ஒரு தலித் என்பதாலேயே’ என்று திரும்பத்திரும்ப விளித்து கொற்றவை கூறும் அறிவுரைகளெல்லாம் அவரது சாதிய உளவியலையே காட்டித் தருகிறது. வன்கொடுமையின் வரம்புக்குள் வந்துவிடாமல் கவனமாக திட்டுவதற்கான நுட்பம் அவருக்கு வாய்த்திருக்கிறது. சரி, ஒரு வாதத்திற்காக கேட்கிறேன், எதை வைத்து என்னை "தலித்தாய் பிறந்ததாலேயே" என்று கூறுகிறார்? அம்பேத்கரை பின் தொடர்கிற இவன் வேறு யாராகவும் இருந்துவிட முடியாது என்கிற பொதுப்புத்தியிலிருந்துதானே?
புரிகிறதா, ஆதவன் இப்படி அரைகுறையாக இருப்பதற்கு காரணம், அம்பேத்கர் என்கிற அரைகுறையைப் பின்தொடர்வதுதான். அதாவது ‘உங்களுக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் அறிவு வராது’ என்பதுதான் கொற்றவை சொல்லவரும் விசயம். கொற்றவையைப் போல நிறையறிவோடு இருப்பதற்கு குறைந்தபட்சம் அவரது சாதியில் பிறந்திருப்பது கட்டாயம் போல. ஒரு பறப்பயலா பிறந்துட்டு என்று சொல்லத் துடிக்கும் ஆத்திரத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு ‘தலித்தாய் பிறந்ததாலேயே’, ‘பிறப்பால் நீங்கள் ஒரு தலித் என்பதாலேயே’ என்று திரும்பத்திரும்ப விளித்து கொற்றவை கூறும் அறிவுரைகளெல்லாம் அவரது சாதிய உளவியலையே காட்டித் தருகிறது. வன்கொடுமையின் வரம்புக்குள் வந்துவிடாமல் கவனமாக திட்டுவதற்கான நுட்பம் அவருக்கு வாய்த்திருக்கிறது. சரி, ஒரு வாதத்திற்காக கேட்கிறேன், எதை வைத்து என்னை "தலித்தாய் பிறந்ததாலேயே" என்று கூறுகிறார்? அம்பேத்கரை பின் தொடர்கிற இவன் வேறு யாராகவும் இருந்துவிட முடியாது என்கிற பொதுப்புத்தியிலிருந்துதானே?
The Essential Writings of B.R. Ambedkar - p 400 |
இப்படியொரு குறிப்பை அபே துபேயின் நூலில் காணலாம். 1906 ஆம் ஆண்டு வெளியான தஞ்சாவூர் கெஜட்டியரில் பக்கம் 80ல் அதன் ஆசிரியரான ஹெமிங்ஸ்வே ‘தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பறையர் பள்ளர் சக்கிலியர் தங்களுக்குத் தீமை விளையும் என்று நம்புவதால் தங்களது குடியிருப்புகளுக்குள்
பிராமணர் நுழைவதை அனுமதிப்பதில்லை’ என்று எழுதியிருக்கிறார். மைசூர் மாநிலத்தின் ஹஸன்
மாவட்டத்தைச் சேர்ந்த ஹோலியரிடையே இதேபோன்ற வழக்கம் இருந்ததாக காப்டன் ஜே.எஸ்.எஃப்.மெக்கன்ஸியும்
( Indian Antiquary 1873) பதிவு செய்திருக்கிறார். (பார்க்க: தலித் விடுதலையும்
திராவிடர் இயக்கமும், தி.பெ.கமலநாதன், பக்கம்: 29, எழுத்து வெளியீடு மற்றும் வலேரியன்
ரோட்ரிக்ஸ் எழுதிய The Essential Writings of B.R. Ambedkar - p 400)
இப்படி தனக்கு முந்தைய மற்றும் தன் காலத்தில்
பொருட்படுத்தத்தக்கதாய் இருந்த ஆவணங்களை ஆதாரமாக கொண்டுதான் அம்பேத்கர் எழுதியிருக்கிறார்.
ஆனால் ரங்கநாயகம்மாவோ யாரோ எவரோ ஒரு அனாமதேயம் எழுதியதை அம்பேத்கர் எடுத்தாண்டு புளகிப்பதாக
குற்றம்சாட்டுகிறார். இந்தத் திரிப்புவேலைச் செய்தாவது அம்பேத்கரை இழித்துக் கூறி உதாசீனப்படுத்துவதன்
பின்னே உள்ள உளவியல் என்ன?
2. // முதலாளிகள் புத்திக்கூர்மை உடையவர்கள்
அதனால்தான் அவர்கள் அந்நிலையில் இருக்கிறார்கள், தொழிலாளர்களுக்கு அந்தளவுக்கு புத்திக்கூர்மை
இருந்தால் இந்நேரம் அவர்களும் அந்நிலைக்கு உயர்ந்திருப்பார்கள் என்று அம்பேத்கர் கூறுகிறாரே?
இது குறித்து உங்கள் கருத்து என்ன? // என்கிறார் கொற்றவை.
உண்மையில் இந்தக் கருத்து 1921 ஜூன் 8 ஆம் நாளிட்ட நவஜீவன் இதழில் காந்தியால் சொல்லப்பட்டது. காந்தியின் இக்கூற்றை மறுக்கும் அம்பேத்கர் ‘சொத்துடைமை வர்க்கத்தை காந்திஜி பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்களுக்கு எதிரான இயக்கத்தைக்கூட எதிர்க்கிறார். பொருளாதார சமத்துவக் கோட்பாட்டில் அவருக்கு நம்பிக்கை இல்லை’ என்று சாடுகிறார். (ஆதாரம்: மு.வீரபாண்டியன் எழுதி என்.சி.பி.எச். வெளியிட்டுள்ள ‘அண்ணல் அம்பேத்கரின் கலை இலக்கியப் பார்வை’ என்கிற நூலின் 21, 22 ஆம் பக்கங்கள்).
உண்மை இவ்வாறிருக்க, முதலாளிகள் தொழிலாளிகள் குறித்து
காந்தி கூறியதை அம்பேத்கர் கூறியதாக எழுதிப் போகும் கொற்றவை, ‘நீங்களும் ஒரு மார்க்சிய
கட்சியின் ஒரு வெகுஜனப் பிரிவில்தானே பொறுப்பில் உள்ளீர்கள்! அப்படியென்றால் நீங்கள்
இன்னமும் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா? மார்க்சியத்தை ஒருவர் தவறாக சித்தரிக்கும்போது
உங்களுக்கு கோபம் வராதா? உங்கள் சாதிய மனோபாவம் அதை மட்டுப்படுத்துகிறதா?’ என்றெல்லாம்
தனது அடுத்தடுத்தக் கேள்விகளை என்னை நோக்கி அடுக்கிக் கொண்டே போகிறார்.
காந்தி எழுதியதை அம்பேத்கர் எழுதியதாக
பொய் சொல்லி வசை பாடும் இந்த உத்தி கொற்றவையின் கட்டுரையிலும் அவர் மொழிபெயர்த்துள்ள
நூலிலும் எவ்விதமாக எங்கெங்கு கையாளப்பட்டுள்ளது என்று துப்பறிந்து கொண்டிருப்பது நமது
வேலையல்ல. ஆயினும் குறைந்தபட்சம் இந்த ஒரு ஆதாரத்தையாவது அவர் கொடுக்கவேண்டும் என்று
எதிர்பார்க்கிறோம். எதுவொன்றையும் ஆழ்ந்துப் படித்து அறிவுநாணயத்தால் விகசிக்கும் அவர் இதற்கான ஆதாரங்களை கொடுக்காமலா போவார்? காத்திருக்கிறோம்.
நன்றி: ஆதாரங்களைத் தேடித்தந்த தோழர்கள் திருவாசகம், ஈஸ்வரன் ஆகியோருக்கு.
சனி, ஆகஸ்ட் 6
மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா - ஆதவன் தீட்சண்யா
தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின்
‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத்
தேவை’ என்கிற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவின் சாதிகள் பற்றி
எழுதிய முதல் ஆய்வாளர் தானல்ல என்றும் தனக்கும் முன்பாகவே பலரும் ஆய்ந்து எழுதியிருக்கிறார்கள்
என்றும் அம்பேத்கரே பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். ஆனால் அவர்களில் எவரையும் இந்த ரங்கநாயகியம்மா
தனது ஆய்வுக்கு உட்படுத்தி எழுதியதாக தெரியவில்லை. எனில் அம்பேத்கரை மட்டும் இவ்வளவு
வன்மமாகவும் குதர்க்கமாகவும் இளக்காரத்தோடும் அணுகும் புத்தகம் ஒன்றை எழுதியாக வேண்டிய
தேவை அவருக்கு என்ன வந்தது?. ‘பள்ளு பறையெல்லாம் புத்தி சொன்னா நாங்க பாத்துக்கிட்டு சும்மா இருப்போம்னு நினைச்சியா?’ என்று பல்லைக் கடிக்கும் அப்பட்டமானதொரு சாதிவெறியரின்
உளவியலுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த ஒருவரால் மட்டுமே இப்படி எழுத முடியும்.
‘இந்தியாவில் சாதிகள்’ என்கிற அம்பேத்கரின்
ஆய்வுரையை தேவைக்கேற்ப ஒட்டியும் வெட்டியும் வலிந்து பொருள்கொள்ளும் ரங்கநாயகம்மா,
அதுதவிர அம்பேத்கரின் கூற்றுக்கு வேறு அர்த்தமில்லை என்று நிறுவும் வெறிகொண்டு ஆடுகிறார்.
அம்பேத்கர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. ஆனால், ரங்கநாயகியம்மா விமர்சனம் என்கிற
பெயரில் அம்பேத்கரை சிறுமைப்படுத்துவதிலேயே முனைப்பாக இயங்கியிருக்கிறார். சாதியம்
பற்றிய அம்பேத்கரின் பார்வையை குழந்தைத்தனமானது, மிகையுணர்ச்சி கொண்டது, நகைப்புக்குரியது
என்றெல்லாம் பரிகாசம் செய்யத் துணிந்த இவரால் சாதியம் குறித்தோ சாதியொழிப்பு குறித்தோ
எதையும் திட்டவட்டமாக கூறமுடியவில்லை என்பதுதான் அவலம்.
அம்பேத்கருக்கு முன்பாகவே அரசியலரங்குக்கு வந்துவிட்ட
கம்யூனிஸ்ட்களில் ஒரு சாரார், சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட தங்களது அகநிலைக்கும் செளகரியங்களுக்கும் குந்தகம்
வராமல்தான் இன்றைக்கும் மார்க்சீயம் பேசிவருகின்றனர். சாதியத்திற்கு எதிரான போராட்டம்
வர்க்கப்போராட்டத்தை நோக்கிய தங்களது பயணத்தை திசைமாற்றிவிடும் என்று அஞ்சுவதாய் பாசாங்கு
செய்யும் இவர்கள், வர்க்கப்போராட்டம் வெற்றியடைந்ததற்கு மக்கியாநாள் அதிகாலையில் தீர்ப்பதற்காக
ஒத்திவைக்கப்பட்டுள்ள அநேகப் பிரச்னைகளில் ஒன்றாகவே சாதியையும் கருதுகின்றனர். அதுவரையிலும்
சாதியத்திற்கு எதிராக சொந்த வாழ்க்கையிலோ, அமைப்புரீதியிலோ எதையும் செய்துவிட வேண்டியதில்லை
என்கிற ‘தத்துவத் தெளிவோடுள்ளவர்களிடையே’ இந்தப் புத்தகம் பெரும் வரவேற்பை பெறுவதற்கான
எல்லா சாத்தியங்களையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் நிலவும் சகலவிதமான ஏற்றத்தாழ்வுகளுக்கும்
ஒடுக்குமுறைகளுக்கும் காரணமாக இருக்கும் சாதியத்திற்கு எந்த பங்கமும் வராமல் பயின்றொழுகிக்
கொண்டே புரட்சியாளர்களாகவும் காட்டிக்கொள்கிற மோசடிப் பேர்வழிகளுக்கு இந்நூல் பெருந்தைரியத்தையும்
தத்துவபலத்தையும் தரவல்லது. இந்நூலை ஒருமுறை படிப்பதன் மூலம் அவர்கள் தம்மைத்தாமே ஆயுசுக்கும்
பாராட்டிக்கொண்டு பெருமிதத்தில் துள்ளக்கூடும். அம்பேத்கரது கண்ணோட்டத்தை அறிவுப்புலத்திலிருந்து
அகற்றுவதன் மூலம் சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மட்டுப்படுத்தவும் மழுங்கடிக்கவும்
முடியும் என்று நம்புகிறவர்களின் குரலாக ரங்கநாயகம்மா பேசுகிறார். இந்தப் புத்தகத்தோடு
ஒப்பிடும்போது, அம்பேத்கரை அவமதிக்கும் தலித் விரோத சாதிவெறியர்கள் மிக கண்ணியவான்களாகத்
தெரிகின்றனர். ஒருவேளை அவர்கள் இதுகாறும் அம்பேத்கரது சிலைகளை உடைத்து செருப்பு மாலை
போட்டு அவமதிப்பதால் உணரும் மனக்கிளர்ச்சியை இனி இந்நூலை வாசிப்பதன் மூலமே கூட அடையமுடியும்.
ஆகவே சாதியவாதிகள் பலரும் இந்நூலை மிகத் தாராளமாக வாங்கிப் படித்து கொண்டாடி இன்புறுகிறார்கள்
என்கிற செய்தி ஓரிரு நாட்களில் வரக்கூடும்.
சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும்
இணைத்து நடத்துவதன் தேவையை உள்வாங்கி மார்க்சீய அமைப்புகளை அது நோக்கி உந்தித்தள்ள
பணியாற்றி வருபவர்களை பின்வாங்கச் செய்கிற தந்திரம் இப்புத்தகத்தில் துருத்திக்கொண்டு
இளிக்கிறது. அம்பேத்கரையும் மார்க்சையும் எதிரெதிர் பகைமுகாம்களாக நிறுவிக் காட்டுவதன்
மூலம் ரங்கநாயகம்மா போன்றவர்கள் யாருக்கு சேவகம் செய்யத் துடிக்கிறார்கள்? நூற்றாண்டைத்
தொட்டிருக்கும் ‘இந்தியாவில் சாதிகள்’ என்கிற அம்பேத்கரின் ஆய்வுரை மீதான வெகுஜன கவனத்தை
சிதறடிக்கும் நோக்கத்துடனேயே இந்நூல் இப்போது தமிழுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறதோ என்கிற
சந்தேகமும் எழாமலில்லை. நேர்த்தியான தாளில் ராயல் டம்மி அளவில் 416 பக்கங்களைக் கொண்ட
இந்நூலை வெறும் 80 ரூபாய்க்கு வெளியிட்டிருப்பதற்கு வாசகரின் வாங்கும் சக்தி மீதான
அக்கறையை விடவும் வாங்கத் தூண்டும் தந்திரமே காரணமாக இருக்க முடியும்.
ம.வெங்கடேசன் என்கிற காவிக்கூலி எழுதிய ‘இந்துத்வ
அம்பேத்கர்’ என்கிற நூலைப் படித்தபோது ஏற்பட்ட அதே அவமானமும் ஆத்திரமும் ரங்கநாயகியம்மாவின்
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போதும் ஏற்படுகிறது. அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் புள்ளியில்
வியக்கத்தக்க வகையில் வலதுசாரிகளோடு கைகோத்திடும் ரங்கநாயகம்மா போன்றவர்கள் எழுதிக்
குமிக்கிற இந்தக் குப்பைகளையெல்லாம் வாசித்து என்ன ஆகப்போகிறது என்று எரிச்சலாகி தூக்கி
தூர எறிந்துவிட வேண்டும் போலிருக்கிறது. உண்மையில் அப்படி எறிந்துவிட வேண்டும் என்று
எதிர்பார்த்துதான் இப்படி எழுதுகிறார்கள். அதற்காகவே எறிந்துவிடாமல் படித்துத் தொலைக்க
வேண்டியிருக்கிறது.
வியாழன், ஆகஸ்ட் 4
டாக்டரை கலெக்டராக்கும் ரசவாதி அல்லது கதைத்திருடன் - ஆதவன் தீட்சண்யா
புதுவிசை இதழில் வெளியிடுமாறு சில ஆண்டுகளுக்கு முன்பு
எஸ்.லட்சுமணபெருமாள் "தனது" (ஆமாம், தனது) கதையொன்றை அனுப்பியிருந்தார்.
துப்புரவுத் தொழிலாளியான தலித் ஒருவர் (வேறு யார்?) படித்து மருத்துவராகிவிடுவார்.
அவர் தலித்தல்லாத பெண்ணொருத்தியை திருமணம் செய்துகொள்வார். தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய
தாயை உடன் வைத்து காப்பாற்ற வேண்டும் என்று அவரை ஊரிலிருந்து அழைத்து வந்துவிடுவார்
மருத்துவர். அவரது மனைவிக்கு இதில் ஒப்புதலில்லை. தனது குழந்தைகள் ஒரு துப்புரவுத்
தொழிலாளியான பாட்டியிடம் நெருங்குவது அவளுக்கு அசூயையாகப்படுகிறது. போதாதற்கு, அந்தக்
கிழவியும் சும்மா அடக்கஒடுக்கமாக இருக்காமல் தனது மகனின் பகுமானத்திற்கு அவமானம் தேடித்தரும்படியாகவே
நடந்து கொள்கிறார். அவர்கள் குடியிருக்கும் பகுதியில் கவனிப்பாரற்று கிடக்கும் நோய்வாய்ப்பட்ட
ஒரு முதியவரைக் கண்டு தாளாமல், அவரை குளிப்பாட்டி சுத்தம் செய்து அந்த இடத்தையும்
துப்புரவாக்கிவிடுகிறாள். இது மற்றவர்களின் கேலிகிண்டலுக்குரியதாகிறது. ஒரு கட்டத்தில்,
நானும் பிள்ளைகளும் இந்த வீட்டில் இருக்கவேண்டுமானால், உங்கம்மாவை வெளியேற்று என்று
புருசனிடம் மல்லுக்கு நிற்கிறாள் மனைவி. வேறுவழியின்றி, நேர்ச்சைக்குப் போகவேண்டும்
என்று நீ கூறிக்கொண்டிருக்கும் கோவிலுக்குப் போய வரலாம் வா என்று அம்மாவை காரில் கூட்டிப்போகும்
மருத்துவர் கண்காணாத இடமொன்றில் அவளை இறக்கிவிட்டு விட்டு இருளில் மறைந்து வீடு திரும்பிவிடுவார்.
சொல்லொணா அவமானங்களுக்கிடையே வளர்த்து ஆளாக்கிய தன் மகனை பிறர் முன்னால் கூனிக்குறுகச் செய்யும் விதமாக ஒரு தாய் செய்வாளா, அப்படி ஆளாக்கிய தாயை போக்கடிக்க மகன் துணிவானா என்கிற சென்டிமென்ட் கேள்விகள் ஒருபுறமிருக்கட்டும். ஒரு புது இடத்தில் தன்னை மறைத்துக்கொள்வதிலேயே பெரிதும் முனைப்பு கொண்டியங்கும் உளவியல் நெருக்கடிக்குள் தலித்துகள் தள்ளப்பட்டிருப்பதை இக்கதை கவனம் கொள்ளவில்லை. அதனாலேயே ஒரு மருத்துவனின் தாய் என்கிற என்கிற நாசுக்கு நிலையைக் காப்பாற்றிக்கொள்ள தெரியாமல் தனக்குள் இருக்கிற துப்புரவுத்தொழிலாளியை அவ்வப்போது வெளியிட்டபடி இருக்கிறாள். முதியவர் மீதான அவளது மனிதாபிமான நடவடிக்கை துப்புரவுத் தொழிலாளியின் இயல்பான தொழில் மற்றும் சாதிப்புத்தியாக புரிந்துகொள்ளப்படும் கெடுவாய்ப்பு கதைக்குள் இருக்கிறது. எந்த இடத்திற்கு / நிலைக்குப் போனாலும் தங்களது சாதிப்புத்தியை காட்டிவிடுவார்கள் என்கிற பொதுப்புத்தியே கதைக்குள் இயங்குகிறது. தலித்துகள் படித்து வளர்ந்துவிட்டால் பெற்ற தாயைக்கூட அனாதையாக்கிவிடுவார்கள் என்கிற தொனியும் இருக்கிறது- எனவே உங்கள் கதையை மீண்டும் ஒருமுறை நீங்களே வாசித்துப் பாருங்கள். ஏதும் திருத்தியெழுத வேண்டும் எனத் தோன்றினால் திருத்தி அனுப்புங்கள் - என்கிற குறிப்பொன்றை லட்சுமண பெருமாளுடன் பகிர்ந்து கொண்டோம். பிறகு தொடர்புகொண்டு கேட்டபோது கொஞ்சம் அவகாசம் தேவை என்றார். சரி அனுப்பும்போது பார்த்துக்கொள்ளலாமென விட்டுவிட்டோம், மறந்தும் போனது. ( பிற்பாடு இக்கதை ‘புறத்தாக்கம்’ என்ற பெயரில் யுகமாயினி முதல் இதழில் வெளியானது. திருத்தி எழுதினாரா அப்படியே வெளியிட்டாரா என்று தெரியவில்லை.)
இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழின் ஒரே ஒரு உளறுவாயன் நூறுநாற்காலிகள் என்றொரு கதையை எழுதியிருப்பதாகவும், தமிழில் தலித் இலக்கியமே அதிலிருந்துதான் முளைப்பு விட்டிருப்பதாகவும் அதுக்குள்ளேயே வளர்ந்து வானோங்கி நிற்பதாகவும், இனி யாரும் தலித் இலக்கியம் என்று எதையும் எழுதி கிழிக்கத் தேவையில்லை என்றும் ஒரு பேச்சு காதில் விழுந்தது. அடடே, தவிட்டுப் பானைக்குள்ளிருந்து தானியம் எப்படி வந்திருக்க முடியும் என்கிற ஆச்சர்யத்தோடு தேடிப் பிடித்து அந்த அதியற்புத குறுநெடு நுண்விரிகதையை வாசித்தேன். ஆஹா, இந்தக் கதையை நாம் ஏற்கனவே எங்கோ வாசித்திருக்கிறோமே என்று பொறி தட்டியது. பிறகுதான் பிடிபட்டது, இது லட்சுமணபெருமாள் எழுதிய கதையென்பது. ஆமாம் கதை அவருடையதுதான். லட்சுமணபெருமாளின் கதையில் வரும் அம்மா, மனைவி, குழந்தைகள் எல்லாரும் நூறு நாற்காலிகளிலும் அப்படியப்படியே இருக்க டாக்டர் மட்டும் கலெக்டராகிவிட்டிருந்தார்.
திருடித் தின்னும் மாங்காய்க்கு மட்டுமல்ல, திருடி எழுதும் கதைக்கும் கூட ருசி கொஞ்சம் அதிகம் போல, அறம் முறம்னு ஒரே அதகளமாகிவிட்டது. எச்சிலை திருடித் தின்றவன் விட்ட ஏப்பத்திலும் இன்னொன்றிலும் இலக்கியத்தின் மெய்யான வாசனையை முகர்ந்தறியும் வல்லமை பெற்ற உளறுவாயனின் வாசகர்கள் அந்தக் கதையை ஆஹா ஒஹோன்னு புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். லட்சுமண பெருமாள் கதையில் டாக்டராக முடக்கிப் போடப்பட்ட தலித்தை, எப்படியாவது கலெக்டராக முன்னேற்றிவிடவேண்டும் என்கிற அக்கறையில்தான் அந்தக் கதை திருடப்பட்டது என்றொரு விளக்கத்தை உளறுவாயனோ உளறுவாயனின் ஆதரவாளர்களோ சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழிசை குறித்த இன்னொருவரது கட்டுரையைத் திருடி சொல்புதிதில் வெளியிட்டுக் கொண்டதற்கான பஞ்சாயத்தே இன்னமும் தீராமலிருக்கிறது.
(விகடன் தடம் இதழ் 3ல் என்மீது உளறுவாயன் கக்கிய வன்மத்திற்கு எதிர்வினையாக இதை எழுதியிருக்கிறேனோ என்று சிலர் கேட்கக்கூடும். இது எதிர்வினை அல்ல, முதல் வினை. நூறு நாற்காலிகள் கதையைப் படித்ததிலிருந்து இதை சொல்லி வருகிறேன். விநாயக முருகனின் வலம் நாவல் குறித்த நிகழ்விலும் கூறினேன். தனது திருட்டு அம்பலப்பட்டுப் போன ஆத்திரத்தில் இருந்த உளறுவாயன்தான் என் மீதான எதிர்வினைக்கு தடம் நேர்காணலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.)
சொல்லொணா அவமானங்களுக்கிடையே வளர்த்து ஆளாக்கிய தன் மகனை பிறர் முன்னால் கூனிக்குறுகச் செய்யும் விதமாக ஒரு தாய் செய்வாளா, அப்படி ஆளாக்கிய தாயை போக்கடிக்க மகன் துணிவானா என்கிற சென்டிமென்ட் கேள்விகள் ஒருபுறமிருக்கட்டும். ஒரு புது இடத்தில் தன்னை மறைத்துக்கொள்வதிலேயே பெரிதும் முனைப்பு கொண்டியங்கும் உளவியல் நெருக்கடிக்குள் தலித்துகள் தள்ளப்பட்டிருப்பதை இக்கதை கவனம் கொள்ளவில்லை. அதனாலேயே ஒரு மருத்துவனின் தாய் என்கிற என்கிற நாசுக்கு நிலையைக் காப்பாற்றிக்கொள்ள தெரியாமல் தனக்குள் இருக்கிற துப்புரவுத்தொழிலாளியை அவ்வப்போது வெளியிட்டபடி இருக்கிறாள். முதியவர் மீதான அவளது மனிதாபிமான நடவடிக்கை துப்புரவுத் தொழிலாளியின் இயல்பான தொழில் மற்றும் சாதிப்புத்தியாக புரிந்துகொள்ளப்படும் கெடுவாய்ப்பு கதைக்குள் இருக்கிறது. எந்த இடத்திற்கு / நிலைக்குப் போனாலும் தங்களது சாதிப்புத்தியை காட்டிவிடுவார்கள் என்கிற பொதுப்புத்தியே கதைக்குள் இயங்குகிறது. தலித்துகள் படித்து வளர்ந்துவிட்டால் பெற்ற தாயைக்கூட அனாதையாக்கிவிடுவார்கள் என்கிற தொனியும் இருக்கிறது- எனவே உங்கள் கதையை மீண்டும் ஒருமுறை நீங்களே வாசித்துப் பாருங்கள். ஏதும் திருத்தியெழுத வேண்டும் எனத் தோன்றினால் திருத்தி அனுப்புங்கள் - என்கிற குறிப்பொன்றை லட்சுமண பெருமாளுடன் பகிர்ந்து கொண்டோம். பிறகு தொடர்புகொண்டு கேட்டபோது கொஞ்சம் அவகாசம் தேவை என்றார். சரி அனுப்பும்போது பார்த்துக்கொள்ளலாமென விட்டுவிட்டோம், மறந்தும் போனது. ( பிற்பாடு இக்கதை ‘புறத்தாக்கம்’ என்ற பெயரில் யுகமாயினி முதல் இதழில் வெளியானது. திருத்தி எழுதினாரா அப்படியே வெளியிட்டாரா என்று தெரியவில்லை.)
இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழின் ஒரே ஒரு உளறுவாயன் நூறுநாற்காலிகள் என்றொரு கதையை எழுதியிருப்பதாகவும், தமிழில் தலித் இலக்கியமே அதிலிருந்துதான் முளைப்பு விட்டிருப்பதாகவும் அதுக்குள்ளேயே வளர்ந்து வானோங்கி நிற்பதாகவும், இனி யாரும் தலித் இலக்கியம் என்று எதையும் எழுதி கிழிக்கத் தேவையில்லை என்றும் ஒரு பேச்சு காதில் விழுந்தது. அடடே, தவிட்டுப் பானைக்குள்ளிருந்து தானியம் எப்படி வந்திருக்க முடியும் என்கிற ஆச்சர்யத்தோடு தேடிப் பிடித்து அந்த அதியற்புத குறுநெடு நுண்விரிகதையை வாசித்தேன். ஆஹா, இந்தக் கதையை நாம் ஏற்கனவே எங்கோ வாசித்திருக்கிறோமே என்று பொறி தட்டியது. பிறகுதான் பிடிபட்டது, இது லட்சுமணபெருமாள் எழுதிய கதையென்பது. ஆமாம் கதை அவருடையதுதான். லட்சுமணபெருமாளின் கதையில் வரும் அம்மா, மனைவி, குழந்தைகள் எல்லாரும் நூறு நாற்காலிகளிலும் அப்படியப்படியே இருக்க டாக்டர் மட்டும் கலெக்டராகிவிட்டிருந்தார்.
திருடித் தின்னும் மாங்காய்க்கு மட்டுமல்ல, திருடி எழுதும் கதைக்கும் கூட ருசி கொஞ்சம் அதிகம் போல, அறம் முறம்னு ஒரே அதகளமாகிவிட்டது. எச்சிலை திருடித் தின்றவன் விட்ட ஏப்பத்திலும் இன்னொன்றிலும் இலக்கியத்தின் மெய்யான வாசனையை முகர்ந்தறியும் வல்லமை பெற்ற உளறுவாயனின் வாசகர்கள் அந்தக் கதையை ஆஹா ஒஹோன்னு புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். லட்சுமண பெருமாள் கதையில் டாக்டராக முடக்கிப் போடப்பட்ட தலித்தை, எப்படியாவது கலெக்டராக முன்னேற்றிவிடவேண்டும் என்கிற அக்கறையில்தான் அந்தக் கதை திருடப்பட்டது என்றொரு விளக்கத்தை உளறுவாயனோ உளறுவாயனின் ஆதரவாளர்களோ சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழிசை குறித்த இன்னொருவரது கட்டுரையைத் திருடி சொல்புதிதில் வெளியிட்டுக் கொண்டதற்கான பஞ்சாயத்தே இன்னமும் தீராமலிருக்கிறது.
(விகடன் தடம் இதழ் 3ல் என்மீது உளறுவாயன் கக்கிய வன்மத்திற்கு எதிர்வினையாக இதை எழுதியிருக்கிறேனோ என்று சிலர் கேட்கக்கூடும். இது எதிர்வினை அல்ல, முதல் வினை. நூறு நாற்காலிகள் கதையைப் படித்ததிலிருந்து இதை சொல்லி வருகிறேன். விநாயக முருகனின் வலம் நாவல் குறித்த நிகழ்விலும் கூறினேன். தனது திருட்டு அம்பலப்பட்டுப் போன ஆத்திரத்தில் இருந்த உளறுவாயன்தான் என் மீதான எதிர்வினைக்கு தடம் நேர்காணலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்
ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில், புத...
-
வாசல் வெளியீடான "ஆகாயத்தில் எறிந்த கல்" தொகுப்பில் உள்ள இக்கட்டுரை 2008 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. விஜயகாந்த் அவர்களே, தாங்கள் கட்...
-
மரிச்ஜாப்பி உண்மையில் என்ன நடந்தது? ஹரிலால் நாத் தமிழில் ஞா.சதிஸ்வரன் வெளியீடு: தமிழ் மார்க்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயம் நான் அப்படியொன்ற...
-
த மிழ்நாட்டில் தனியார் தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களது வேலைநேரத்தை 8மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமாக மாற்றியமைக்கும் சட்டத்திருத்தத்தை ஏப...