ஞாயிறு, ஏப்ரல் 30

பெரிதினும் பெரிது கேள்... - ஆதவன் தீட்சண்யா



யானையே மோதினாலும்  அதிராத
அரண்மனையின் கதவு
மரம் இரும்பு கல் மற்றும்
எதற்கும் இளகாத உணர்வினாலானது
  
அங்குலம்தோறும்
புதுப்புது  பூட்டுகளாலும் தாழ்களாலும்
அணிசெய்து வலுவேற்றப்பட்ட
அந்தப் புராதனக்கதவின் பின்னே
வதைபட்டுக்கொண்டிருக்கிறது
நம் ஒவ்வொருவரது உயிரும்

உயிரை மீட்டெடுக்கத் துடிக்கும் நம்மை
அச்சுறுத்திப் பின்வாங்கச் செய்திட
ஆயுதங்களேந்தி அணிவகுப்பதிலும்
கதவுக்கு வெகுதொலைவிலேயே நிறுத்திவிட
தடையரண்களை எழுப்புவதிலும்
வாயிற்காப்பாளர்கள்
மும்முரமாயிருக்கும் இவ்வேளையில்
நாம் ஏன்
கதவுக்குப் பதிலாக
அரண்மனையையே தகர்க்கக்கூடாது?


24.04.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...