tag:blogger.com,1999:blog-8999027626051026871.post3130568067413823445..comments2024-01-19T13:19:38.747+09:00Comments on தந்துகி: புதியபாதைகளில் சென்றால்தான் இடிந்தக்கரையை அடையமுடியும்... ஆதவன் தீட்சண்யாthanthugihttp://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8999027626051026871.post-52131709431221638192012-10-23T16:20:24.804+09:002012-10-23T16:20:24.804+09:00ஞானி அவர்களுக்கு /த.மு.எ.க.ச தோழர்களும் நிர்ப்பந்த...ஞானி அவர்களுக்கு /த.மு.எ.க.ச தோழர்களும் நிர்ப்பந்திக்கப்படும் வாய்ப்பு உள்ளதா? அப்படி நடந்தால் என்ன செய்வீர்கள்?நான் தனி நபர். நீங்கள் இயக்கம்./ ஞானி அவர்களே சொல்வதுபோல் அப்படி ஒரு நிலை வரும் எனில் இயக்கம் அதை சரியான முறையில் அணுகும், இதில் (தனி நபரான) ஆதவனை ‘நீ பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்’ என (தனி நபரான) ஞானி வற்புறுத்துவது நியாயமாக தெரியவில்லை. இக்பால்veligalukkuappaalhttps://www.blogger.com/profile/06444647750527595590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-8719322295781578722012-10-23T03:29:20.155+09:002012-10-23T03:29:20.155+09:00எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கும் மற்றும் தமுகஎச ...எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கும் மற்றும் தமுகஎச தோழர்களுக்கும்,<br />உஙகள் சங்கத்தின் நோக்கங்களில் ஒன்றான விஞ்ஞானப் பார்வையையும் விஞ்ஞான நோக்கையும் வளர்த்தெடுப்பது என்பது எனக்கு மிகவும் விருப்பமான விடயமானதால் நான் தமுகஎசவின நடவடிக்கைகளை நீண்டகாலமாக உன்னிப்பாக கவனித்து வருகிறவன். இந்த நோக்கம் முற்போக்கானது என்றாலும் இது நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தில் பிரிவு 51ஏ(எச்)ன் படி இந்தியக் குடிமகனின் கடமையாகும். உங்கள் கட்டுரையைப் படித்தபின் எனக்கு கீழ்வரும் கேள்விகள் எழுகிறது. <br />போராடும் அணுஉலை எதிர்ப்பாளர்களை நசுக்க முயற்சிக்கும் அரசின் முயற்சி கீழ்த்தரமானது என்பதை ஐனநாயக விரும்பிகள் எதிர்க்கிறார்கள். அந்த வகையில் நசுக்கப்படும் போராளிகளுடன் தமுகஎச போன்ற ஐனநாயகத்திற்காக போராடும் அமைப்பு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவது வரவேற்கத்தக்கதே. அதே நேரத்தில் போராடுபவர்களின் வாதம் அனைத்தும் நியாயம் என்று தமுகஎச ஏற்றுக் கொள்கிறதா? அணுமின்சாரம் என்பது கூடவே கூடாது என்பதுதான் தமுகஎசவின் நிலைப்பாடா?<br />கூடங்குளம் அணுமின்நிலையம் இயங்கினால் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் உயிர்வாழும் உரிமை பறிக்கப்படும் என்று தமுகஎச நம்புவதற்கு ஏதாவது அடிப்படைக் காரணங்கள் இருக்கிறதா? அல்லது வழக்கமான அணுஉலை பற்றிய மூட நம்பிக்கைகளுக்கு தமுகஎசவும் தாளம் போடுகிறதா? தோழர் உதயகுமாரின் கூற்றான அணுஉலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அணுப்பிளவு பொருட்களான ரேடியோ சீசியம் போன்றவை காற்றில் கலந்து கதிர்வீச்சு உண்டாக்கும் என்பதை தமுகஎச எப்படி நம்புகிறது? விஞ்ஞானப் பார்வையுடைய தமுகஎச அப்படி நம்புவதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?<br />தோழர் புஷ்பராயன் கூற்றுப்படி கடலில் உள்ள மீன்கள் இறந்துவிடும் என்ற கூற்றிற்கு இந்தியாவை விட்டுவிடுங்கள் உலகில் வேறு பல நாடுகளில் கடலோரம் இயங்கும் அணுஉலைகளால் ஏதேனும் மீன்வளம் குறைந்ததற்கான புள்ளிவிபரங்கள் உண்டா? அல்லது உலகில் இன்றுவரை உலா வந்து கொண்டிருக்கும் நடமாடும் அணுஉலைகளான (80லிருந்து 150 மெகாவாட் திறனுள்ள) நீர்மூழ்கி கப்பல்களால் மீன்கள் செத்து விழுந்ததாக ஏதேனும் தகவல் உண்டா? இந்தியாவில் இருக்கும் ஒரே அணுஉலை நீர்மூழ்கிக்கப்பல் விசாகப்பட்டினத்தில் நீண்டகாலம் தங்குகிறதே, அங்கு மீன்கள் செத்துபோனதாக ஏதேனும் தகவல்கள் தமுகஎசவினரிடம் உண்டா?<br />தோழர் உதயகுமாரின் விருப்பப்படி அணுஉலையின் தீமைகளையும் கூடங்குளம் போராட்டத்தின் நியாயங்களையும் உலகெங்கும் தமுகஎச கொண்டு செல்லப் போகிறதா? அணுஉலையின் தீமைகள் என்று எவற்றையெல்லாம் தமுகஎச பட்டியலிடுகிறது?<br />விஜயன்<br />Anonymoushttps://www.blogger.com/profile/07109147697319892843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-27958195555344664732012-10-22T09:41:07.542+09:002012-10-22T09:41:07.542+09:00"இவர்களை வரவேற்று நம்மோடு வைத்துக்கொள்ள விரும... "இவர்களை வரவேற்று நம்மோடு வைத்துக்கொள்ள விரும்புகிறோம்" என்று எங்களை ஒரு நேசசக்தியாக உள்ளிழுத்துக் கொள்வது பற்றியதாகத்தான் அவர்களது அக்கறையாக இருந்தது. ஞானி கேட்பது போன்ற வாக்குமூலங்கள் எதுவும் தோழர்.உதயகுமாருக்கோ அல்லது இடிந்தக்கரை மக்களுக்கோ தேவைப்பட்டிருக்கவில்லை. அமைப்பாக இயங்கி செழித்த அனுபங்களைப் பெற்றிருக்கிற அவர்கள் ஒரு அமைப்பினர் இங்கே எவ்வாறு வந்து சேர்ந்திருப்பார்கள் என்பதை வெகுலகுவாக புரிந்துகொண்டார்கள். இந்தப் புரிதல்தான், எழுப்பவேண்டிய கேள்விகள், தீர்த்துக் கொள்ள வேண்டிய சந்தேகங்கள் , நேர்செய்யவேண்டிய குற்றச்சாட்டுகள் என்பனவற்றுக்கு முன்னுரிமை வழங்காது - தம்மிடம் வந்தோரை தம்மோடு இணைத்துக்கொண்டு செல்வதற்கான அணுகுமுறையை அவர்களுக்கு உருவாக்கி இருக்கிறது. தங்களோடு சேர்ந்து யார்யாரால் எவ்வளவு தூரம் உடன்வரமுடிந்தாலும் தங்களுக்கு பலமே என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த அறிதலை அவர்கள் அமைப்பாக இயங்குவதன் வழியே பெற்றிருக்கிறார்கள். குறைந்தபட்சம் மாரியாத்தா கோயிலில் கூழ் ஊத்துகிற கமிட்டியிலாவது இன்னொரு மனிதரோடு சேர்ந்து வேலை செய்து கூட்டுமனப்பான்மையையும் சகிப்புணர்வையும் அடுத்தவர்களது பங்களிப்பை அங்கீகரிக்கிற பக்குவத்தையும் பெறாத - தான் மட்டுமே சரி என்பதால் தன் நிழலைக்கூட உடனழைத்துச் செல்வதற்கு தயாரில்லாத தனிமனிதர்களுக்கு இந்த அறிதல்நிலை வாய்க்காது. நிலைபாட்டில் மாற்றம் என்று நேர்நிலையாக பார்க்கத்தெரியாமல் முரண்பட்ட நிலை என்று எதிர்நிலைக்குத் தள்ளுவதும்கூட இந்த அறிதல் வாய்க்காததன் கெடுவிளைவுகளில் ஒன்றுதான். thanthugihttps://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-72073099905840914382012-10-22T05:21:42.132+09:002012-10-22T05:21:42.132+09:00தமிழ் அய்யனார், ஆதவன் தீட்சண்யாவுக்கு என்னை நீங்கள...தமிழ் அய்யனார், ஆதவன் தீட்சண்யாவுக்கு என்னை நீங்கள் அறிமுகம் செய்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் பரஸ்பரம் நன்கு அறிந்த நண்பர்கள்.நிற்க நான் யாருக்கும் வழக்கறிஞர் அல்ல. முகநூலில் நான் தமிழில் எழுதியதை சரியாகப் புரிந்து கொள்ள இயலாவிட்டால் அது உங்கள் வாசிப்பின் பலவீனம்.ஞாநியை யாரும் விமர்சிக்கக் கூடாது என்றோ கேள்வி கேட்கக் கூடாது என்றோ நான் அதில் சொல்லவே இல்லை. எதையாவது தப்பர்த்தம் செய்து கொண்டு குழந்தைத் தனமாக எழுதாதீர்கள்.பாஸ்கர்சக்திமேற்கு தொடர்ச்சி மலைhttps://www.blogger.com/profile/02345907172778736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-83462634280856162862012-10-22T02:31:36.506+09:002012-10-22T02:31:36.506+09:00கேள்வி கேட்பவர்களிடமும் சந்தேகம் எழுப்புபவர்களிடமு...கேள்வி கேட்பவர்களிடமும் சந்தேகம் எழுப்புபவர்களிடமும் நேரடியாக உங்கள் கருத்தை பதிவு செய்தால் நன்றாக இருக்கும். அவர்கள் குறைகளைப் பட்டியலிடுவது தான் உங்கள் நோக்கமோ என்று தோன்றும் எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.<br /><br />தோழமையுடன்<br />சீனி மோகன் சீனி மோகன்https://www.blogger.com/profile/01544587726467746055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-20318631644868559482012-10-22T02:27:30.569+09:002012-10-22T02:27:30.569+09:00கேள்வி கேட்பவர்களிடமும் சந்தேகம் எழுப்புபவர்களிடமு...கேள்வி கேட்பவர்களிடமும் சந்தேகம் எழுப்புபவர்களிடமும் கோபமோ ஆத்திரமோ கொள்ளாமல் நேரடியாக உங்கள் கருத்தை பதிலாகச் சொல்லப் பழகுங்களேன்.<br /><br />தோழமையுடன்<br />சீனி மோகன்சீனி மோகன்https://www.blogger.com/profile/01544587726467746055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-3539574718548819532012-10-21T17:27:07.157+09:002012-10-21T17:27:07.157+09:00ஆதவன்...//அச்சுதானந்தன் மன்னிப்பு கேட்கச் செய்யப்ப...ஆதவன்...//அச்சுதானந்தன் மன்னிப்பு கேட்கச் செய்யப்பட்டது போல த.மு.எ.க.ச தோழர்களும் நிர்ப்பந்திக்கப்படும் வாய்ப்பு உள்ளதா? அப்படி நடந்தால் என்ன செய்வீர்கள்?// என்ற என் எளிய கேள்விகளுக்கு பதில்கள் என்ன ? நிப்பந்திக்கப்படும் வாய்ப்பு இல்லை என்று சொலல்லாம்.அல்லது வாய்ப்பு உண்டு.ஆனால் நாங்கள் மன்னிப்பு கேட்கமாட்டோம் என்று சொலல்லாம். அல்லது மன்னிப்பு கேட்கச் செய்தாலும் கூடங்குளம் மக்கலுக்கு தன் ஆதரவு உண்டு என்று வி.எஸ் சொன்னதைப் போலவே நாங்களும் செய்வோம் என்று சொல்லலாம். இதில் ஒன்றைக் கூட சொல்ல இயலாத நிலையை மறைக்க, ஏன் குமுதம் விஷயத்தை இழுக்கிறீர்கள்? நான் தனி நபர். நீங்கள் இயக்கம். நான் குமுதத்தைக் கண்டித்தது அது படைப்பாளிகளின் பதிப்புரிமையை பறித்த விஷயத்தில்தான். அதற்காக அப்போதும் சரி இன்றுவரையும் சரி உங்கள் த.மு.எ.ச உட்பட யாரும் குரல் எழுப்பவில்லை. நான்தான் எழுப்பினேன். என்னை எழுதக் கேட்டபோது என் பதிப்புரிமையை விட்டுத் தரமுடியாது, அவர்களுடைய விதி என்னைக் கட்டுப்படுத்தாது என்ற என் நிபந்தனையை அவர்கள் ஒப்புக் கொண்டபின்னர்தான் எழுதினேன்.இது பற்றி நான் ஒன்றும் இன்றுவரை யாருக்கும் விளக்கம் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இல்லை. இது தொடர்பாக தகவல் பிழைகள் இணையத்தில் வெளியாகி என் கவனத்துக்கு வந்தால் அவற்றைத் திருத்துகிறேன். அவ்வளவுதான்.நான் தனி நபர்தான்.ஆனாலும் பொது வாழ்வில் இருப்பதால் என் தொடர்பான சந்தேகங்கள் பொறுப்பான தொனியில் எழுப்பப்படும்போது பதில் சொல்வதை தவிர்ஃப்ப்பதே இல்லை. அவதூறுகளை மட்டுமே புறக்கணிப்பேன். நீங்கள் இயக்கம்.நீங்கள் ஒரு சமூகப் பிரச்சினையில் முரண்பட்ட நிலைகளை எடுக்கும்போது எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லித்தான் தீரவேண்டும்.நான் கேட்ட இரு கேள்விகளும் இப்போதும் உங்கள் பதில்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. அன்புடன் ஞாநி gnanihttps://www.blogger.com/profile/10068044383536965753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-35816361210767134432012-10-21T03:17:15.814+09:002012-10-21T03:17:15.814+09:00நன்றி தோழரே!உண்மையின் குரலின் வலிமையை உங்கள் எழுத்...நன்றி தோழரே!உண்மையின் குரலின் வலிமையை உங்கள் எழுத்தில் உணர்ந்தேன்.நிழல்வண்ணன் இராதாகிருட்டிணன்https://www.blogger.com/profile/17159300078793433964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-89172079662713802702012-10-20T18:27:44.221+09:002012-10-20T18:27:44.221+09:00கூடங்குளம் பிரச்னையில் உங்களது நிலைப்பாடு என்ன, மு...கூடங்குளம் பிரச்னையில் உங்களது நிலைப்பாடு என்ன, முல்லைப்பெரியார் விவகாரத்தில் உங்களது நிலைப்பாடு என்ன என்று தெளிவாக முன்வையுங்கள். அதன்மீது பேசுவோம். ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்மான்னு எதிர்கேள்விக்கு இங்கு ஒரு தேவையும் இல்லை. thanthugihttps://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-85440540165496900422012-10-20T17:42:51.951+09:002012-10-20T17:42:51.951+09:00//ஜைதாப்பூரில் அணுமின்நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்ப...//ஜைதாப்பூரில் அணுமின்நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவேக் மொண்டீரோ. அவரை விடவா நாங்கள் பெரிய அறிவுஜீவி?// இதை யார் எழுப்பியிருந்தாலும் எனது கேள்வி அதுதான்... விவேக் மொண்டிரோவை விட ஆதவனைப் பற்றிக் கூடுதலாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்... முல்லைப்பெரியார் விவகாரத்திலும் எங்கள் தலை மீது ஏன் சுமத்துகிறீர்கள் என்று அந்தப் பகுதி மக்கள் கேட்கிறார்களே... அதற்கும் இதுதான் பதிலா...??ganeshhttps://www.blogger.com/profile/07404687057579084030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-32831234893489816912012-10-20T11:57:48.900+09:002012-10-20T11:57:48.900+09:00நாட்டுமக்கள் நிம்மதியாக வாழ்வதற்காக இந்த 13 ஆயிரம்...நாட்டுமக்கள் நிம்மதியாக வாழ்வதற்காக இந்த 13 ஆயிரம் கோடி விரயம்தான் ஆகட்டுமே, என்ன குடிமுழுகிவிடப் போகிறது? அட, அப்படியேதான் 13ஆயிரம் கோடி விரயத்தால் இந்த நாடு நாசமாகிக் போய்விடும் என்றால் போய்த் தொலையட்டும், வாழ்கின்ற வேட்கையில் எமது மக்கள் தங்களுக்கான ஒரு வலிய நாட்டை விருப்பம்போல உருவாக்கிக்கொள்வார்கள்Anonymoushttps://www.blogger.com/profile/10218855058404799606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-31816973965004606962012-10-20T02:16:46.663+09:002012-10-20T02:16:46.663+09:00ஞாநியை திட்டாதீர்கள் ஆதவன், அவர் மட்டும் தான் கேள்...ஞாநியை திட்டாதீர்கள் ஆதவன், அவர் மட்டும் தான் கேள்வி கேட்பார், அவரை யாரும் கேள்வி கேட்க கூடாதாம், அவரது வழக்கறிஞர் பாஸ்கர் சக்தி கடந்த வாரம் அவரை கேள்வி கேட்டவர்களை எல்லாம் முகநூலில் ஒரு கை பார்த்துவிட்டார். Anonymoushttps://www.blogger.com/profile/05608553025557606765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-28172120275004194382012-10-20T02:02:00.654+09:002012-10-20T02:02:00.654+09:00நீங்கள் குமுதத்துக்கே எழுதப்போனதுக்கு இன்றுவரை விள...நீங்கள் குமுதத்துக்கே எழுதப்போனதுக்கு இன்றுவரை விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பதும், வி.எஸ்.மன்னிப்புக் கேட்டதுமான நிலை எல்லோருக்கும் வரவேண்டுமென்று ஏன் நினைக்கிறீர்கள் ஞாநி?thanthugihttps://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-76824263976497850052012-10-19T23:59:05.293+09:002012-10-19T23:59:05.293+09:00அருமையான பதிவு.வாழ்த்துகள்.1986லிருந்து அணு உலைகளு...அருமையான பதிவு.வாழ்த்துகள்.1986லிருந்து அணு உலைகளுக்கு எதிராகக் கருத்துப் பிரச்சாரம் செய்து வருபவன், தொடர்ந்து பல்வேறு கலாசார, அரசியல் பிரச்சினைகளில் இடதுசாரி அரங்குகளில் தோழமையுடன் பங்கேற்பவன் என்ற உரிமையில் ஒரு கேள்வி.தோழர் அச்சுதானந்தன் மன்னிப்பு கேட்கச் செய்யப்பட்டது போல த.மு.எ.க.ச தோழர்களும் நிர்ப்பந்திக்கப்படும் வாய்ப்பு உள்ளதா? அப்படி நடந்தால் என்ன செய்வீர்கள்? அன்புடன் ஞாநிgnanihttps://www.blogger.com/profile/10068044383536965753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-86664098892678038382012-10-19T22:53:12.584+09:002012-10-19T22:53:12.584+09:00//பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் வேண்டும் என்பதும் ...//பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் வேண்டும் என்பதும் உறுதியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பின் ஏற்போம் என்று கூறியிருந்தால் எல்லோரும் சேர்ந்து போராடியிருக்கலாமே?// - யார் இதை உங்களிடம் வந்து மனு கொடுத்து மன்றாடிச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இதே கோரிக்கைகளை வைத்து நீங்கள் போராடுவதை யார் தடுத்தார்கள்? பாதுகாப்பு அம்சங்கள் பற்றி வண்டிவண்டியாக கதைத்தாயிற்று. சுப்ரீம்கோர்ட்டில் பேந்தபேந்த முழிக்கிறது அரசாங்கம். போபாலில், செர்னோபிலில், புகுசிமாவாவில் கூட பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக இருப்பதாகத்தான் சொன்னார்கள். என்னாச்சு? புகுசிமா இழப்புகளை ஈடுகட்ட 5 லட்சம் கோடி டாலர் வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் வெறும் சாமிபடம் போட்ட தகரடாலர் கூட கொடுக்கமுடியாது என்கிறது ரஷ்ய நிறுவனம். சுயேச்சையான சர்வதேச நிபுணர் குழு ஒன்று ஆய்வு செய்யவேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து முடிக்கும்வரை உலைச்செயல்பாடுகளை நிறுத்து என்றாவது போராடுங்கள், காலம் தாழ்ந்துவிடவில்லை. அல்லது, பாண்டிச்சேரியிலும் கடல் இருக்கிறது, இங்கு வந்து அணு உலையைக் கட்டுங்கள் என்றாவது போராடுங்கள். அடுத்தவர் உயிர்மீது பந்தயம் கட்ட நமக்கென்ன உரிமை இருக்கிறது? thanthugihttps://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-17615252670947678002012-10-19T22:29:37.742+09:002012-10-19T22:29:37.742+09:00கூடங்குளம் அணு மின் உலை திறக்கலாம் என்கிறீர்களா ? ...கூடங்குளம் அணு மின் உலை திறக்கலாம் என்கிறீர்களா ? வேண்டாம் என்கிறீர்களா? இவ்வளவு நாள் வேண்டும் என்று இருந்தது ஏன்?அறியாமையா? பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் வேண்டும் என்பதும் உறுதியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பின் ஏற்போம் என்று கூறியிருந்தால் எல்லோரும் சேர்ந்து போராடியிருக்கலாமே?என்ன ஆனாலும் கூடங்குளம் வேண்டாம் என்பது என்ன வகையான கோரிக்கை?மற்ற வாதங்கள் எல்லாமே உணர்ச்சி வசப்படுத்தவும் வசப்பட்டும் வைப்பவை.போராட்டக்களத்தில் இருக்கும் மக்கள் முன்னே உணர்ச்சிவசப்படுவது இயல்பே ஆனாலும் இயக்க வ்ழி இருப்பவர்கள் இப்படியா ? மு எ க ச நிலைபாடு இதுவா ? மாறிவிட்டதா? இப்போதும் பொய்வழக்குகள் ,பாதுகாப்பு அச்சம்,அடக்குமுறை எதிர்ப்பு ,தொடர்ந்த உறுதியான போராட்டம் போன்றவற்றில் அவர்களோடு தொடர்ந்து உடன்படலாம் ஆனால் மூடு என்பதில் முஎ க ச சேர்ந்து குரல் கொடுப்பது என்று எங்கே எப்போது முடிவு எடுத்தீர்கள்? உணர்ச்சி யில்லாமல் இருக்கக்கூடாது என்று கிண்டல் செய்வது எளிதாக இருக்கலாம்..அதையும் தாண்டி உண்மைகள் மற்றும் நியாயம் இருக்கும் என்றே நினைக்கிறேன்vasdevhttps://www.blogger.com/profile/15583488695649471713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-36288796338634484392012-10-19T19:57:58.038+09:002012-10-19T19:57:58.038+09:00கூடங்குளத்தில் அணுமின் உலை ஆரம்பிக்கப்போவதாக அரசாங...கூடங்குளத்தில் அணுமின் உலை ஆரம்பிக்கப்போவதாக அரசாங்கம் அறிவிக்கும் முன்பாகவே அதை எதிர்த்துப் போராடுவதற்கு அங்கே கத்திக்கபடா, ராக்கெட் லாஞ்ச்சரோடு துன்பச்சுற்றுலாவாக போய் சேர்ந்துவிட்டவர் கி.இளம்பிறை. அப்பேர்ப்பட்ட அதிஉக்கிரப் போராளியை அன்றைக்கு இடிந்தக்கரையில் பார்க்கவே முடியவில்லை. எங்கே என்று விசாரித்தேன், கடலுக்கடியில கண்ணிவெடி பதிக்கப் போயிருக்கிறார் என்றார்கள். எப்ப கரைக்கு வருவார் என்று விசாரித்தேன், வாய்ப்பே இல்லை கூடங்குளம் உலையை குண்டுவைத்துப் பிளந்துவிட்டுத்தான் கரையேறுவார் என்றார்கள். கல்தோன்றா மண்தோன்றா காலத்தே வாலோடு முன் தோன்றிய அந்த மூத்தப்போராளி அங்கே அன்னந்தண்ணி ஆகாரமில்லாமல் கிடக்க நாங்களோ ''ஓர் அரங்கத்தினுள் சுகமாக அமர்ந்துக்கொண்டு" கூட்டம் மன்னிக்கனும் நாடகம் நடத்தினால் அவருக்கு கோவம் வரத்தானே செய்யும்? (பைக் ஓட்டினால் கூட நின்றுகொண்டுதான் ஓட்டுவாராம் இளம்பிறை. ஏன்னா உட்கார்ந்தா அது சுகமாகிவிடுமாம்). ஆனால், இளம்பிறை நாங்கள் இடிந்தக்கரைக்குப் போனதைவிடவும் லேட்டாக நீங்கள் பின்னூட்டம் போட வந்திருக்கிறீர்கள். உங்களை இன்னும் முதலில், இன்னும் இன்னும் முதலில் எதிர்பார்த்தேன். அதாவது நான் பதிவு போடுவதற்கு முன்பே... thanthugihttps://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-23079194575751166082012-10-19T19:21:33.473+09:002012-10-19T19:21:33.473+09:00தோழர் காலதாமதம் தான் என்றாலும் இந்த காலத்தில் மெல்...தோழர் காலதாமதம் தான் என்றாலும் இந்த காலத்தில் மெல்ல மெல்ல உங்கள் மனதில் உண்மை சேகரமாகியிருக்கிறது என்பதை உங்கள் பதிவு காட்டுகிறது. இது இந்த நேரத்தில் நிச்சயம் நம் தோழர்கள் வாசிக்க வேண்டிய பதிவு, நிச்சயம் நீங்கள் உங்கள் கட்சியின் நிலைபாடுகளை எல்லாம் தொகுக்காமல் இப்படி இயல்பாக உங்கள் மனதில் இருந்து எழுப்பும் கேள்விகள் எல்லாம் நியாயமானவை, இந்த உலகம் இந்த கேள்விகளை எல்லாம் பல வடிவங்களில் பல ஆண்டுகளாக பல முறை கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அம்பானியின் மின்சார தேவைகள் எல்லாம் நம் பொது தொகுப்புகளில் இருந்து தான் வழங்கப்படுகிறது, அதை விட அவன் வாஸ்து காரணமாக அந்த வீட்டில் இன்னும் குடியேறவில்லை என்பது கூடுதல் உண்மை. கேள்விகள் கேட்காவிட்டால் இது கோமாளிகள் தேசமாக மாறிவிடும்Anonymoushttps://www.blogger.com/profile/05608553025557606765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-20195087779265326362012-10-19T18:53:23.316+09:002012-10-19T18:53:23.316+09:00பணிகள் பல்லாயிரம் இருக்கலாம். ஆனாலும் உழைப்பால் மு...பணிகள் பல்லாயிரம் இருக்கலாம். ஆனாலும் உழைப்பால் முன்னேறும் கூடங்குளம் மக்களின் உண்மைகளையும் அணு உலை எதிர்ப்பாளர்களின் வாழ்க்கையையும் நேரில் சென்று ஆய்வுக்களம் செய்ய முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நேரம் இப்போதாவது கிடைத்ததே எனும் போது பாராட்டவா? கடமையைச் செய்வதற்குக் கூட அச்சத்தின் உச்சத்தில் இருக்கும் இவர்களை முறையாக நம்ப முடியவில்லை என்பது அடியேனின் மனத்தில் ஊறிப் போன எண்ணம்.முற்போக்கு எழுத்தாளர்கள் எவராவது அல்லது இவர்களின் கூட்டமாவது அணு உலையால் வரும் கேடுகளைப் பற்றித் துண்டறிக்கையாவது வெளியிட்டுள்ளார்களா? எனக்குத் தெரியவில்லை? ஏன் இத்தனை நாள் கழித்து வந்ததை மிகைப் படுத்துகிறார்கள் எனப் புரிய இல்லை. இவர்களைப் பற்றி அடித்தட்டு மக்களும் உழைக்கும் மனிதர்களும் எப்படி நினைத்துள்ளார்கள் எனக் கூடத் தெரியாத நிலையில் இவர்கள் இன்பச் சுற்றுலா போய் வந்ததைப் போல் பதிக்கிறார்கள்.எப்படித்தெரியுமா? கூட்டம் போட்டு. அதுவும் எங்கே தெரியுமா? ஓர் அரங்கத்தினுள் சுகமாக அமர்ந்துக் கொண்டு.எங்களுக்கும் தெரியும் இவர்கள் நடத்தும் நாடகம் என்னவென்று. எதுவரை நடக்குமென்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-49003020759398261722012-10-19T01:39:46.157+09:002012-10-19T01:39:46.157+09:00’ட்ரன்ஸ்பரன்சி இண்டெர்நேஷனல்’ என்ற அமைப்பு 2005ஆம்...’ட்ரன்ஸ்பரன்சி இண்டெர்நேஷனல்’ என்ற அமைப்பு 2005ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் படி முக்கியமான 11 அரசுத்துறைகளில் மட்டும் புழங்கக்கூடிய ஊழல் பணம் மட்டும் 21068 கோடி ரூபாய்! இது பழைய ஆய்வு! அதன் பின் தமிழர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளத்தக்க வகையில் ஒரே ஊழலில் மட்டும் 172000 கோடி புழங்குகின்றது, அப்புறம் க்ருஷ்ணா-கோதாவரி வாயுப்படுகையில் ரிலையன்ஸ் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல்...இப்படி புதுசா புதுசா பெருமைகள்! செய்தவர்கள் செய்கின்றவர்கள் காங்கிரசும் பிஜேபியும். இந்த ஊழல் பணத்தில் ஒரு சல்லிக்காசு கூட 1948க்குப் பிறகு ஊழல் செய்தவனிடம் இருந்து மீட்டெடுத்த்தாக சரித்திரம் இல்லை; இப்படி இந்தியமக்களின் பல லட்சம் கோடி பணத்தை சுரண்டித்தின்று கொழுத்த கமிசன் லாபி நாய்களின், சுவிஸ் வங்கிகளில் கறுப்புபணத்தை பதுக்கி வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடாமல் பாதுகாக்கும் மக்கள் விரோத மன்மோகன்,சிதம்பரம்,நாராயணசாமி கும்பலின் வாதமான் ‘ஏற்கனவே 13000 கோடி ரூபாய் கூடன்குளத்துக்கு கொட்டி அழுது விட்டோம், அதை எப்படி நிறுத்துவது’ என்று இடும் கூச்சலை, மக்கள் நலனுக்காக நிற்கும் கம்யூனிஸ்டுக்கள் அப்படியே எதிரொலிப்பது நியாயம் அல்ல. ஒரு சில தேசவிரோதிகள் வாழ பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை இந்த அரசுகள் இப்படி கேள்வி கணக்கு இன்றி தியாகம் செய்யும் எனில் ஒரு தேசத்தின் பல லட்சம் மக்கள் வாழ 13000 கோடி ரூபாய்தான் மண்ணோடு மண்ணாய் போகட்டுமே? வானம் இடிந்துவிடாது ...இக்பால்veligalukkuappaalhttps://www.blogger.com/profile/06444647750527595590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-25501091276825633952012-10-18T19:08:47.400+09:002012-10-18T19:08:47.400+09:00//முகேஷ் அம்பானி மலபார் மலைப்பகுதியில் தனக்கும் தன...//முகேஷ் அம்பானி மலபார் மலைப்பகுதியில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு பெரிய வீடு கட்டியிருப்பதாக செய்தித்தாள்களின் மூலம் அறிந்தேன். அந்த வீட்டிற்கு மாதம் 6 இலட்சம் யூனிட் பொது மின்சாரம் தேவைப்படுமாம். ஒரு நல்ல வாழ்க்கை வாழத் தேவைப்படும் மின்சார அளவு எவ்வளவு? சிலருக்கு மும்பாயிலே இவ்வளவு மின்சாரம் தேவையானால் இந்த அணுமின் நிலையத்தை ஏன் மலபார் ஹில்ஸில் கவர்னர் மாளிகை இருக்கும் மேட்டுப்பகுதியில் அமைக்கக்கூடாது. நீங்கள் சொல்வதைப்போல அணு மின்சாரம் பாதுகாப்பானதாக, மலிவானதாக, தூய்மையானதாக இருக்குமானால், நாங்கள் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களாக இருப்போமானால் ஏன் இதை நீங்கள் மெத்தப்படித்த மலபார் ஹில்ஸ் படித்தவர்களிடம் புரியவைத்து அங்கேயே அமைப்பது எளிதாக இருக்கும் தானே? // என்கிறார் ஜைதாப்பூரில் அணுமின்நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவேக் மொண்டீரோ. அவரை விடவா நாங்கள் பெரிய அறிவுஜீவி? thanthugihttps://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-61515978005705970312012-10-18T18:21:42.387+09:002012-10-18T18:21:42.387+09:00//அணுமின் உலை பாதுகாப்பானது என்றால், குடியரசுத்தலை...//அணுமின் உலை பாதுகாப்பானது என்றால், குடியரசுத்தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புப்பகுதிகள், ஆளுநர் மாளிகைகள், சட்டமன்றங்கள், சட்டமன்ற உறுப்பினர் விடுதிகள் போன்ற இடங்களில் அததற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்திச் செய்யுமளவிலான அணுமின் உலைகளை நிறுவி அவை உண்மையிலேயே பாதுகாப்பானவை என்று நிரூபிக்கும்பட்சத்தில் உதயகுமாரும் போராட்டக் குழுவினரும் இடிந்தக்கரை மக்களும் எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக் கொள்வார்கள். // என்ன தோழர் எவ்வளவு பெரிய அறிவுஜீவி நீங்கள்... இப்படிப் போய் ஒரு வாதத்தை வைத்திருக்கிறீர்கள்... ganeshhttps://www.blogger.com/profile/07404687057579084030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-50293013672980610862012-10-18T15:48:03.194+09:002012-10-18T15:48:03.194+09:00ஸ்பெக்ட்ரம் ஊழல்
நில ஊழல்
கிரானைட் ஊழல்
ராணுவ தளவா...ஸ்பெக்ட்ரம் ஊழல்<br />நில ஊழல்<br />கிரானைட் ஊழல்<br />ராணுவ தளவாட ஊழல் <br />எழுநூறு கோடி சட்டமன்ற மூடல் <br />இதெல்லாம் பார்க்கையில் <br />13ஆயிரம் கோடி விரயமா? அதுவும் இந்திய அரசியல்வாதிக்கு! இதெல்லாம் ஒரு amountey இல்ல<br />என்ன மக்கள் நலனுக்காக விரயமாகுதேங்குறது தான் அவனுங்க கவலை MiranGihttps://www.blogger.com/profile/03595734680755621521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-34937311604543380962012-10-18T15:43:47.055+09:002012-10-18T15:43:47.055+09:00தனிமனிதன் ஸ்பெக்ட்ரம் ஊழல் நிலஊழல் ராணுவதளவாட ஊழல்...தனிமனிதன் ஸ்பெக்ட்ரம் ஊழல் நிலஊழல் ராணுவதளவாட ஊழல் என கோடிகளை மனிதத்தன்மையே இல்லாமல் விழுங்கும் போது 13ஆயிரம் கோடி என்பது மக்கள் நலனை கருத்தில் கொள்ளும் போது ஒரு விரைய செலவே அல்ல MiranGihttps://www.blogger.com/profile/03595734680755621521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-6990205209094311322012-10-18T14:30:44.654+09:002012-10-18T14:30:44.654+09:00//மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும் என்று பொத்தாம...//மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி அவர்களை பயந்தாங்கொள்ளிகள் போல சித்தரிப்பவர்கள் உண்மையில் அவர்களை தம்மையறியாமலே அவமதிக்கிறார்கள்//.இந்தப்பதிவு தாமதமானதாக உணர்கிறேன். ஆனாலும் சரியானதைச்சொல்லி மேலே கோடிடப்பட்ட கருத்தை செரிக்க முடியாமல் இருந்த நிலைமையை கட்டுரை மாற்றியிருக்கிறது. 5 லட்ஷம் கோடி பண முதலைகளுக்கு சலுகை வழங்கியவர்கள் இந்த13ஆயிரம் கோடியையும் அதே போல நினைத்து திட்டத்தை நிறுத்தி விடலாம்...அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.com