திங்கள், டிசம்பர் 19

ஞானபேதம் - ஆதவன் தீட்சண்யா

வெளியே உலவும் பூனை குறித்த அச்சத்தில்
தொட்டிக்குள் நீந்திச் சளைக்கிறது மீன்
இரவும் பகலும் துடுப்பசைத்து
ஆழம் துளைத்து மேகம்தீண்ட
ஒரு கரிய வானவில் போல்
மின்னும் ஒளித்தண்டில் துள்ளி
நீர்வெளியின் சாகசத்துள் பாயாமல்
வேசியின் வண்ணங்கள் பூசி
கூண்டுக்கிண்ணத்திற்குள் சலம்பித் திரிவது
மீனாய் இருக்க முடியாதென தின்னவொப்பாமல்
வேட்டைக்கு வந்த இடத்தில்
வெறுமனே வேடிக்கை பார்த்திருக்கிறது பூனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கள்ளத்தனத்தின் மீது கல்லெறியும் கதைகள் - ஆதவன் தீட்சண்யா

செந்நிலம் - ஜெயராணி சிறுகதைகள் வெளியீடு: சால்ட் ஓர் ஊடகவியலாளராக அறியப்படும் தோழர் ஜெயராணி, நாங்கள் நடத்திக் கொண்டிருந்த புதுவிசை இதழின் தொட...