புதன், டிசம்பர் 21

தன்னழிப்பு - ஆதவன் தீட்சண்யா

சிதைத்த கானகவெளியில்
நீர்நிலைகள் தூர்த்து
நிர்மாணித்த நகரங்களில்
இப்போது
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்

சந்தடியற்று
தனிமையின் அமைதியில் தோய்ந்து
சூரிய சந்திர ஒளி குளித்து
மாசற்ற காற்றில் தலைதுவட்ட
வேறு வனங்களையழித்து
புறநகர்ப் பகுதியொன்றில்
ஒவ்வொருவராய் குடியேறிய பின் கிளம்பியது புகார்:
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கள்ளத்தனத்தின் மீது கல்லெறியும் கதைகள் - ஆதவன் தீட்சண்யா

செந்நிலம் - ஜெயராணி சிறுகதைகள் வெளியீடு: சால்ட் ஓர் ஊடகவியலாளராக அறியப்படும் தோழர் ஜெயராணி, நாங்கள் நடத்திக் கொண்டிருந்த புதுவிசை இதழின் தொட...