
வன்னியமக்களின்
ஏகப்பிரதிநிதியாக தம்மைக் காட்டிக்கொண்டு பெருங்கட்சிகளோடு கொழுத்த பேரத்தை நடத்தி
இதுவரை ஆதாயம் கண்டுவந்த ராமதாஸ், பிரதமர் வேட்பாளர் என்று பா.ஜ.க.வால் அறிவிக்கப்பட்ட
மோடி அதில் வெற்றியும் பெற்றுவிட்டதைக் கண்டு உற்சாகமாகி 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு
பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளர் என்று தன் மகனை அறிவித்திருக்கிறார். அறிவிக்கப்பட்ட
மாத்திரத்திலேயே ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போன்ற நினைப்பில் அவர்கள் வெளிப்படுத்திவரும்
மிதப்பையும் ஆணவத்தையும் அடாவடிப் பேச்சுகளையும் பார்த்து வெறுப்படைந்துள்ள தமிழக மக்கள்
அப்படியொரு கேடு 2016ல் அல்ல, 22016ல் கூட நடந்துவிடாமல் தடுத்துவிடுவார்கள் என்கிற
நம்பிக்கை ஏற்படுகிறது.
கருத்து
வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஆய்வு நேர்மை,
உண்மை விளம்பல் ஆகியவற்றுக்கான விலை அதற்குரியவர்களின்
உயிர்தான் என்கிற அச்சுறுத்தலை உருவாக்குவதன் மூலம் சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள
சாதியத்தையும் பத்தாம்பசலித்தனமான கட்டுக் கதைகளையும் மூடநம்பிக்கைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும்
தக்கவைத்துக்கொள்ள முடியுமென சங்பரிவார பயங்கரவாதிகள் நம்புகின்றனர். அதன்பொருட்டு
அவர்கள் அறிவுஜீவிகளையும் ஆய்வாளர்களையும் பகுத்தறிவாளர்களையும் அடுத்தடுத்து கொன்று
குவித்து வருகிறார்கள். நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம்.கல்பர்கி என இப்பட்டியலை
நீட்டிப்பதற்காக இந்தப் பயங்கரவாதிகள் நாடெங்கிலும் கொலைவெறியோடு அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
சாதியத்திற்கும்
பார்ப்பனீய ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக பசவண்ணரால்
உருவாக்கப் பட்ட வீரசைவம் நாளடைவில் அதுவே ஒரு சாதியாகி இந்துமதத்தால் உள்வாங்கப்பட்ட
கொடுமையையும், அது கடைபிடிக்கும் தீண்டாமைகளையும், தலைவிரித்தாடும் மூட நம்பிக்கைகளையும்
காவி பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்திவந்த கல்பர்கி கொல்லப்பட்டுவிட்டார். இவ்வாறான
கொலைகளின் மூலம் தங்களது கருத்தியல் எதிரிகளை தீர்த்துக்கட்டுகிறவர்கள் அறிவுத்துறையினரை
அச்சத்திற்கு ஆட்படுத்தி சுயதணிக்கைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு தூண்டுவதிலும் வெற்றிபெற
முடியுமென நம்புகிறார்கள். கல்பர்கியின் கொலையைக் கொண்டாடிக் களிக்கும் காவி பயங்கரவாதிகள், அடுத்து கொல்லப்படவிருப்பவர் பேராசிரியர் பகவான்
என பகிரங்கமாக அறிவிக்குமளவுக்கு அச்சமற்றுத் திரிகிறார்கள். ஆனால் இந்த கொக்கரிப்புகளுக்கு
அஞ்சாத பகவான், சமூகத்தை முற்போக்கான வழியில் கொண்டு செலுத்தும் கடப்பாட்டுடன் போராடியவர்கள் வரலாறு நெடுகிலும்
உலகெங்கிலும் உச்சரித்த சொற்களை ஒரு பிரகடனம் போல் முழங்கியிருக்கிறார்: “உங்களால்
எங்களைத்தான் கொல்லமுடியுமே தவிர எங்களது சிந்தனைகளை அல்ல”. பகவானின் முழக்கத்தை அதே
துணிவுடன் வழிமொழிவதும் கல்பர்கி கருத்துலகில் நடத்திவந்த போராட்டத்தைத் தொடர்வதும்
பரவலாக்குவதும்தான் சாதிய மற்றும் காவி பயங்கரவாதிகளுக்கு பொருத்தமான பதிலடி என்றே
புதுவிசையும் நம்புகிறது. ஆனால் கருத்தியல் போராளிகள் கொல்லப்படும் போதெல்லாம் நாம்
இவ்வாறாக எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகள் ஏதாவது விளைவுகளை உருவாக்கியிருக்கிறதா என்று
பரிசீலிக்கவும் கோருகிறது.
-
ஆசிரியர் குழு
கட்டுரை
விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங்பரிவாரத்திற்காக
நிகழ்த்திய பயங்கரவாதங்கள்
- லீனா கீதா ரெகுநாத் தமிழில்: செ.நடேசன்
விடலையும் குடும்பனும் - பூமணியின் அஞ்ஞாடி
- டி. தருமராஜ்
விக்டர் ஹாரா : மக்களுக்காக இசைத்த கிதார்
- எஸ்.வி. ராஜதுரை
மலம் அள்ளாத ராக்கெட் - ந,கோபி
மார்க்சீயமும் தமிழ் உணர்வும் - ப.கு. ராஜன்
கவிதை : ஆதவன் தீட்சண்யா
சிறுகதை
பொம்மி - அதியன்
கதாபாத்திரம் சொன்ன எழுத்தாளரின் கதை
- உதயசங்கர்
கூடிழந்த பறவைகளின் சாபம் - அ. கரீம்
முன்னட்டை வடிவமைப்பு: கார்த்தி
- டி. தருமராஜ்
விக்டர் ஹாரா : மக்களுக்காக இசைத்த கிதார்
- எஸ்.வி. ராஜதுரை
மலம் அள்ளாத ராக்கெட் - ந,கோபி
மார்க்சீயமும் தமிழ் உணர்வும் - ப.கு. ராஜன்
கவிதை : ஆதவன் தீட்சண்யா
சிறுகதை
பொம்மி - அதியன்
கதாபாத்திரம் சொன்ன எழுத்தாளரின் கதை
- உதயசங்கர்
கூடிழந்த பறவைகளின் சாபம் - அ. கரீம்
முன்னட்டை வடிவமைப்பு: கார்த்தி
neengal katturaiyil kuriyathu mutrilum unmai
பதிலளிநீக்கு