தயாரில்லை
விரல்களினிடத்தில்
முள் முளைத்தவர்களின் கை குலுக்க
வற்புறுத்தாதீர்
பொம்மைகள் ராஜ்யத்தில் பிரஜையாகும்படி
வேண்டாம்
உங்களது உலைகளில் வடித்தெடுத்த முகமூடிகள்
மனமொப்பவில்லை
நீங்கள் நடந்த தெருக்களில்
நானும் கால்பதிக்க
கோபிக்காதீர்கள்
கழிவறைக்குள் உண்ணும்
உங்கள் விருந்துகளில் பங்கேற்காமைக்கு
பொறாமைப்படாதீர்கள்
நான் நானாகவே இருப்பதற்கு
மன்னியுங்கள்
எப்போதும் எதற்காகவும்
மன்னிப்பு கோராததற்காக
விட்டுவிடுங்கள் தனிமையில்
ஆதாமும் ஏவாளுமில்லாத
ஆதிச்சூன்யத்தில்
மறுபடியும் உருவாகிற அமீபாக்களாவது
மனிதர்களினும்
நல்ல உயிரிகளைத் தரலாம்
உங்களுக்கொன்றும்
இழப்பில்லை
எல்லோரது
கல்லறைகளுக்குமான
மலர்க்கொத்தை
முன்கூட்டியே
தந்துவிட்டுச் செல்கிறேன்.
விரல்களினிடத்தில்
முள் முளைத்தவர்களின் கை குலுக்க
வற்புறுத்தாதீர்
பொம்மைகள் ராஜ்யத்தில் பிரஜையாகும்படி
வேண்டாம்
உங்களது உலைகளில் வடித்தெடுத்த முகமூடிகள்
மனமொப்பவில்லை
நீங்கள் நடந்த தெருக்களில்
நானும் கால்பதிக்க
கோபிக்காதீர்கள்
கழிவறைக்குள் உண்ணும்
உங்கள் விருந்துகளில் பங்கேற்காமைக்கு
பொறாமைப்படாதீர்கள்
நான் நானாகவே இருப்பதற்கு
மன்னியுங்கள்
எப்போதும் எதற்காகவும்
மன்னிப்பு கோராததற்காக
விட்டுவிடுங்கள் தனிமையில்
ஆதாமும் ஏவாளுமில்லாத
ஆதிச்சூன்யத்தில்
மறுபடியும் உருவாகிற அமீபாக்களாவது
மனிதர்களினும்
நல்ல உயிரிகளைத் தரலாம்
உங்களுக்கொன்றும்
இழப்பில்லை
எல்லோரது
கல்லறைகளுக்குமான
மலர்க்கொத்தை
முன்கூட்டியே
தந்துவிட்டுச் செல்கிறேன்.
நல்ல கவிதை.நிறைய பேரின் மனதில் ஓடுகிற எண்ணங்கள் இங்கு வார்த்தைகளாக/நன்றி,வணக்கம்.
பதிலளிநீக்கு