சனி, செப்டம்பர் 15

பிழை - ஆதவன் தீட்சண்யா



ழுகுகளை விரட்டிவிட்டு
கொன்றவர்களே தின்றுகொண்டிருக்கிறார்கள் பிணங்களை
அடங்காப்பசி மூர்த்த அவர்களின் மேசைகளில்
வெட்டிவைக்கப்பட்டுள்ளது
சற்றைக்கு முன் பிடிபட்ட குழந்தையின் தலையும்
கொப்பளித்துவரும் சுடுரத்தத்தின் ருசிவேண்டி
இதோ என் குரல்வளையை அறுத்து
கோப்பையை நிறைத்துக்கொண்டவர்கள்
அறுத்தெடுத்து தொப்பிக்குள் மறைத்துவைத்திருந்த 
எமது பெண்களின் குறிகளை வெறித்தபடி
களைகின்றனர் தமது கீழாடைகளை

புலராப்பொழுதின் செய்திகளில்
எங்கள் பெயர் பயங்கரவாதிகள்
அவர்கள் பெயர் போலிஸ் அல்லது ராணுவம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...