சனி, மார்ச் 5

தணிக்கை - ஆதவன் தீட்சண்யா

‘மனதுக்குப் பட்டதை எழுதுவேன்’ எனத் தொடங்கியது
எழுத்தாளருடைய மிக நீண்ட வாக்குமூலம்

இடநெருக்கடியின் காரணத்தால்
வெட்டிக்குறைக்கப்பட்ட அதன் இரண்டாம் வரி:
‘யார் மனசும் புண்படும்படியாய் எழுதமாட்டேன்’

வாக்கிய நீளத்தையும் சுருக்கி
வாக்குமூலம் இவ்வாறாக முடித்துவைக்கப்பட்டது
‘எழுதமாட்டேன்’

பிறகென்ன, போடுங்கள்
சுபம் / சவம்.

நன்றி: புதியவிதி 28.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உன்னதபுரத்துக் கதைகள் - பிம்பம் ஷாகுல் / கட்டுரைத்தொகுப்பு/ அணிந்துரை - ஆதவன் தீட்சண்யா

ஒரு தனிமனிதரின் வாழ்வனுபங்கள் , அவரது வாழ்விடம் மற்றும் காலத்தின் வரலாற்றை நிறைவு செய்யும் பகுதியாக பொருந்திவிடுகிறது. அவ்வகையில் த...