சனி, மார்ச் 5

தணிக்கை - ஆதவன் தீட்சண்யா

‘மனதுக்குப் பட்டதை எழுதுவேன்’ எனத் தொடங்கியது
எழுத்தாளருடைய மிக நீண்ட வாக்குமூலம்

இடநெருக்கடியின் காரணத்தால்
வெட்டிக்குறைக்கப்பட்ட அதன் இரண்டாம் வரி:
‘யார் மனசும் புண்படும்படியாய் எழுதமாட்டேன்’

வாக்கிய நீளத்தையும் சுருக்கி
வாக்குமூலம் இவ்வாறாக முடித்துவைக்கப்பட்டது
‘எழுதமாட்டேன்’

பிறகென்ன, போடுங்கள்
சுபம் / சவம்.

நன்றி: புதியவிதி 28.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம் - சுஜாதா சிவஞானம் நூலுக்கான முன்னுரை - ஆதவன் தீட்சண்யா

“திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற முடியவில்லையே என்ற விரக்தி பெரும்பான்மை சமுதாய மக்களின் மனதில் இருக்கிறது . பிரதமர் வந்தப் பிறகாவ...