செவ்வாய், மார்ச் 8

குரங்கைப்போலவே விகடனும் குட்டியைவிட்டு ஆழம் பார்க்கிறதா? - ஆதவன் தீட்சண்யா

"கண்ஹையா குமாரும் கம்யூனிசமும் போகும் பாதை சரிதானா? என்கிற தலைப்பிலான கட்டுரை ஒன்றை விகடன்.காம் இன்று வெளியிட்டிருந்தது http://www.vikatan.com/news/india/60105-why-kanhaiya-is-not-youth-icon.art கட்டுரையாளரின் பெயரில்லை. வழக்கமாக கட்டுரைக்கு கீழே பின்னூட்டங்களைப் பதிவதற்கென விடப்படும் இடமும் இல்லை. "இது பற்றிய கருத்துகளை இன்பாக்ஸில் பதியவும்" என்று புதுவகையான அறிவிப்பு. 

கட்டுரையின் முதலெழுத்து தொடங்கி முற்றுப்புள்ளிவரை இடதுசாரிகள் மீது வசவும் அவதூறும் மலிந்து கிடந்தன. ஜிகினா வேலை காட்டி அரசதிகாரத்தை கைப்பற்றியுள்ள தங்களால் நாட்டில் அன்றாடம் நிகழ்ந்து வரும் அட்டூழியங்களை இந்த கன்னைய குமார் அம்பலப்படுத்திவிட்டானே என்கிற ஆத்திரம் காவிக்கும்பலுக்கு வருவதில் அர்த்தமிருக்கிறது, விகடனுக்கு ஏன் வருகிறது?  கன்னைய குமாரின் நேர்காணலையும் வெளியிடுவது, அவரை அவதூறு செய்கிற அநாமதேயங்களுக்கும் இடமளிப்பது என்கிற இரட்டை நிலைப்பாட்டின் பின்னேயுள்ள தந்திரம் எதன் பொருட்டானது? இந்தக் கட்டுரையை எழுதியது யார்? கட்டுரையின் உள்ளடக்கத்தோடு ஒருமை கொண்டுதான் விகடன்.காம்  வெளியிட்டதா? வேறு யாரையும் திருப்திபடுத்தி ஆதாயம் தேடும் இழிமுயற்சியின் ஒருபகுதியாக இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதா? இப்படி யார், யாரை என்ன அவதூறு செய்து எழுதிக் கொடுத்தாலும் இதேபோல விகடன் வெளியிடுமா? என்று இதைப் படித்தவர்களிடையே  பற்பல கேள்விகள். ஆனால் இந்தக் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லமால், எதுவே நடவாதது போல இப்போது விகடன்.காம் அந்தக் கட்டுரையை நீக்கியுள்ளது. 

தனது இணையத்தில் இடம் பெறும் தகுதி அந்தக் கட்டுரைக்கு இல்லையென்று கருதியே அதை நீக்கியுள்ளது என்றால் அதுபற்றிய குறிப்பையும் வருத்தத்தையும் விகடன்.காம் வெளியிடவேண்டும். இல்லையெனில், வெளியிடுவோம், எதிர்ப்பு வந்தால் எடுத்துவிடலாம், அவதூறு போய்ச்சேர்ந்த மட்டிலும் லாபம் என்பதே விகடனின் தந்திரமெனனக் கருதப்படும. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...