வியாழன், டிசம்பர் 22

வல்லடி - ஆதவன் தீட்சண்யா

மூர்க்கமழை                                                              
திமிறியாடும் வெள்ளம்
நீர்ப்பண்டமாய் கரைகிறது ஊரே
வீதி நிர்த்தூளியானாலென்ன
வீட்டுக்குள் வெள்ளம் வந்துவிடக்கூடாது

ஊருக்கு வந்தும் ஊருக்குள் வராத
புறவழிச்சாலை பேருந்துபோல
எங்கும் தங்காமல்
கண்காணா வெளியோடி வெள்ளக்காடு வடிந்தபின்
சேறும் சகதியுமாய் நிலைதளம்பிக் கிடக்கிறது திடநிலம்

தெருவில் இறங்கமுடியாது யாரும்
அதனாலென்ன
வீட்டோரம் ஒதுங்கியிருக்கும் பிணமொன்றை நடைப்பாலமாக்கி
ஏறிக் கடந்து இலக்கை அடைவதில் இருக்கிறது
இருபத்தியொன்றாம் நூற்றாண்டிற்குள்
உன்னைப் பொருத்திக்கொள்ளும் சாதுர்யம்.

2 கருத்துகள்:

  1. நிறைவுப் பகுதி சூப்பர்! :)

    பதிலளிநீக்கு
  2. வீட்டோரம் ஒதுங்கியிருக்கும் பிணமொன்றை நடைப்பாலமாக்கி
    ஏறிக் கடந்து இலக்கை அடைவதில் இருக்கிறது
    இருபத்தியொன்றாம் நூற்றாண்டிற்குள்
    உன்னைப் பொருத்திக்கொள்ளும் சாதுர்யம்.//

    கவிதை வரிகள் முகத்தில் அறைந்து போகிறது
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
    த.ம 2

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...