புதன், டிசம்பர் 28

வியாக்கியானம் - ஆதவன் தீட்சண்யா

கை பிசகி தெறித்த மசித்துளி
வெட்டாந்தரையாயிருந்த தாளின்
வெறுமை குலைத்தது

மாந்திரீகக் குறிப்புகளின்
சங்கேத முற்றிப்புள்ளி எனவும்
இன்னுஞ்சிலரோ
புள்ளிகளாய் நிரப்ப வேண்டியதன்
முதற்புள்ளி இதுவென்றும் கூறினர்

ஆதி இதுவே
அதுவே மையத்திலிருக்கிறது
எங்கும் ரகசியமாய் நிரம்பியிருக்கிறது
எல்லாவிடமும் நகர்கிறது
உண்மையில் அது புள்ளியல்ல
புள்ளி போலிருக்கும் பூடகத்தின்
பூர்வ வடிவென்றார் வேறார்

புள்ளி
புள்ளியாயிருந்தது.
பலர்
பலவாய் சொல்லிக்கொள்ள.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது ஆசிரியர்களுக்கு - ஆதவன் தீட்சண்யா

சேலம் மாவட்டம் ஓமலூர் பக்கமிருக்கிற ஆர்.சி.செட்டிப்பட்டியில் தான் எனக்கு நான்கு வயதாகும் வரை எங்கள் குடும்பமிருந்தது. அது எனது தந்தைவழி தாத்...