புதன், டிசம்பர் 28

வியாக்கியானம் - ஆதவன் தீட்சண்யா

கை பிசகி தெறித்த மசித்துளி
வெட்டாந்தரையாயிருந்த தாளின்
வெறுமை குலைத்தது

மாந்திரீகக் குறிப்புகளின்
சங்கேத முற்றிப்புள்ளி எனவும்
இன்னுஞ்சிலரோ
புள்ளிகளாய் நிரப்ப வேண்டியதன்
முதற்புள்ளி இதுவென்றும் கூறினர்

ஆதி இதுவே
அதுவே மையத்திலிருக்கிறது
எங்கும் ரகசியமாய் நிரம்பியிருக்கிறது
எல்லாவிடமும் நகர்கிறது
உண்மையில் அது புள்ளியல்ல
புள்ளி போலிருக்கும் பூடகத்தின்
பூர்வ வடிவென்றார் வேறார்

புள்ளி
புள்ளியாயிருந்தது.
பலர்
பலவாய் சொல்லிக்கொள்ள.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்: தோற்றமும் செயல்பாடும் - ஆதவன் தீட்சண்யா

தோழர் கண.குறிஞ்சி அவர்கள் வெளியிட்டுவரும் "புதுமலர்" காலாண்டிதழின் 2025 அக்டோபர் - டிசம்பர் இதழில் வெளிவந்துள்ள நேர்காணல். 0  தமிழ...