புதன், டிசம்பர் 28

வியாக்கியானம் - ஆதவன் தீட்சண்யா

கை பிசகி தெறித்த மசித்துளி
வெட்டாந்தரையாயிருந்த தாளின்
வெறுமை குலைத்தது

மாந்திரீகக் குறிப்புகளின்
சங்கேத முற்றிப்புள்ளி எனவும்
இன்னுஞ்சிலரோ
புள்ளிகளாய் நிரப்ப வேண்டியதன்
முதற்புள்ளி இதுவென்றும் கூறினர்

ஆதி இதுவே
அதுவே மையத்திலிருக்கிறது
எங்கும் ரகசியமாய் நிரம்பியிருக்கிறது
எல்லாவிடமும் நகர்கிறது
உண்மையில் அது புள்ளியல்ல
புள்ளி போலிருக்கும் பூடகத்தின்
பூர்வ வடிவென்றார் வேறார்

புள்ளி
புள்ளியாயிருந்தது.
பலர்
பலவாய் சொல்லிக்கொள்ள.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம் - சுஜாதா சிவஞானம் நூலுக்கான முன்னுரை - ஆதவன் தீட்சண்யா

“திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற முடியவில்லையே என்ற விரக்தி பெரும்பான்மை சமுதாய மக்களின் மனதில் இருக்கிறது . பிரதமர் வந்தப் பிறகாவ...