சமதளத்தில் முகடுகளில்
காற்றுவெளியில்
கடல்நீர்ப்பரப்பில்
நரம்பென கிளைக்கும்
தடங்கள் வழியே
கொடிவழி நேர்வழி
தனிவழி பொதுவழி
விதிவழி புதுவழி
சஞ்சாரம்
வண்டிவாகனத்தில்
குதிரையில் கழுதையில்
கொழுப்பெடுத்து யானையில்
ரதத்தில் பல்லக்கில்
அடுத்தவன் தோளில்
சொந்தக்காலில்
கனவில் நனவில்
கால்பாவாக் கற்பனையில்
பயணம் :2
விலாசம் தொலைத்து
வெளிப்போய்
மூளை சிதறி
முகமும் சிதைந்து
விபத்து விபரப் பலகை நிரப்ப
அகாலத்தில் மரணித்தவர்
இங்கு
தேவையற்ற தகவலாய்...
என்ன இருக்கிறது
கடிகார முட்கள் கூடும்
கணமேனும் ஓயாமல்
போக்கற்றுத் திரிந்து
பொட்டென்று சாவதில்
மார்க்கமறிந்து
சூட்சுமம் தேர்ந்து
லாவகமாய் ஒதுங்கி
முன்பாய்ந்து அம்பென
இலக்கடையும்
சாதுர்யத்தில்தான் எல்லாமே.
காற்றுவெளியில்
கடல்நீர்ப்பரப்பில்
நரம்பென கிளைக்கும்
தடங்கள் வழியே
கொடிவழி நேர்வழி
தனிவழி பொதுவழி
விதிவழி புதுவழி
சஞ்சாரம்
வண்டிவாகனத்தில்
குதிரையில் கழுதையில்
கொழுப்பெடுத்து யானையில்
ரதத்தில் பல்லக்கில்
அடுத்தவன் தோளில்
சொந்தக்காலில்
கனவில் நனவில்
கால்பாவாக் கற்பனையில்
பயணம் :2
விலாசம் தொலைத்து
வெளிப்போய்
மூளை சிதறி
முகமும் சிதைந்து
விபத்து விபரப் பலகை நிரப்ப
அகாலத்தில் மரணித்தவர்
இங்கு
தேவையற்ற தகவலாய்...
என்ன இருக்கிறது
கடிகார முட்கள் கூடும்
கணமேனும் ஓயாமல்
போக்கற்றுத் திரிந்து
பொட்டென்று சாவதில்
மார்க்கமறிந்து
சூட்சுமம் தேர்ந்து
லாவகமாய் ஒதுங்கி
முன்பாய்ந்து அம்பென
இலக்கடையும்
சாதுர்யத்தில்தான் எல்லாமே.
enna solla vareenga?
பதிலளிநீக்குநல்ல கவிதை .வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசமவெளிமுகடுகளில் நடக்கும் பயணங்களே ந்ம் மனதிற்கு உகந்த்தாய் இருந்திருக்கிறது இதுவரை /
அப்படியே பழகியும்,வாழ்ந்தும் வந்து விட்ட சமூகப்பெருவெளி சாதுர்யங்களின் சங்கடங்களிலும்,நைச்சியத்தனதிலும் இன்னும்,இன்னுமாகவும்/