உயிரைப் பிடுங்கியிழுக்கும்
இந்தச் சித்ரவதைகளுக்கு
முடிவேயில்லையா எனப் புலம்புகிறாய்
நான் சொன்னபடி முன்னமே செத்திருந்தால்
தப்பித்திருக்கலாமே என்கிறேன்
அட கோழையே
சாவதற்கா
இவ்வளவு கஷ்டப்படுகிறோம்
என்கிறான்
விளக்குக்கம்பத்தில் தொங்கவிடப்பட்டவன்
கஷ்டப்பட்டுகொண்டேயிருந்தால்
வாழ்வதுதான் எப்போதென
எனக்கெழுந்தக் கேள்வியை யாரோ கேட்கிறார்கள்
சண்டையிடாமல் இருங்களேன் என்று உபதேசித்தபடி
மணல்மூட்டைகளுக்குப் பின்னிருந்து
வந்த ஒருவன்
நிதானமாய் சுட்டுத்தள்ளுகிறான்
நம் ஒவ்வொருவரையும்
நன்றி: அம்ருதா, ஏப்ரல் 2012
மானிடம் மனிதம் தொலைக்கிறது...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்
முன்னமே செத்திருந்தால், தப்பித்திருக்கலாம் தான்.!?
பதிலளிநீக்கு