புதன், மே 2

ஓம் சாந்தி - ஆதவன் தீட்சண்யா


யிரைப் பிடுங்கியிழுக்கும் இந்தச் சித்ரவதைகளுக்கு
முடிவேயில்லையா எனப் புலம்புகிறாய்

நான் சொன்னபடி முன்னமே செத்திருந்தால்
தப்பித்திருக்கலாமே என்கிறேன்

அட கோழையே
சாவதற்கா
இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்கிறான்
விளக்குக்கம்பத்தில் தொங்கவிடப்பட்டவன்

கஷ்டப்பட்டுகொண்டேயிருந்தால்
வாழ்வதுதான் எப்போதென
எனக்கெழுந்தக் கேள்வியை யாரோ கேட்கிறார்கள்

சண்டையிடாமல் இருங்களேன் என்று உபதேசித்தபடி
மணல்மூட்டைகளுக்குப் பின்னிருந்து வந்த ஒருவன்
நிதானமாய் சுட்டுத்தள்ளுகிறான்
நம் ஒவ்வொருவரையும்

நன்றி: அம்ருதா, ஏப்ரல் 2012



2 கருத்துகள்:

ஓடிப் போனவன் - பிரெஞ்சுக் கவிஞர் போரிஸ் வியான், தமிழில்: வெ.ஸ்ரீராம்

  குடியரசுத் தலைவர் அவர்களே இதோ உங்களுக்கு ஒரு கடிதம் நீங்கள் ஒருவேளை அதைப் படிக்கலாம் உங்களுக்கு நேரம் இருந்தால். இப்போதுதான் கிடைத்தன எனக்...