புதன், ஜூன் 20

ஜாக்கிரதை - செங்கருநீலன்

எதிரி ஏந்தியிருப்பதினும்
வலியதும் நவீனமானதுமென்று
நான் ஏந்தியிருப்பதோ
ஜிகினாத்தாள் சுற்றிய அட்டைக்கத்தி

காற்றில் சுழற்றினும் கைப்பிடி உடையும்
உறையுள் செருகினும் முனையது மழுங்கும்
சாணை பிடிக்கவே ஏலாக்கத்தி
சண்டை பிடிப்பது எங்ஙனம்

உக்கிரமாக சத்தம் எழுப்பி
யுத்தம் போலே தோற்றம் கிளப்பி
கத்தியைக் காப்பதே லட்சியமாகுது
கபடம் பூசிய ஜிகினா மினுங்குது.

தகதகத்தொளிரும் கத்தியைக் கண்டு
தப்பியோடி பதுங்கினர் எதிரிகள்
என்னுடன் போரிடும் இழிவினைச் சுமக்க
இனியெவரேனும் களத்தினிலுண்டா?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம் - சுஜாதா சிவஞானம் நூலுக்கான முன்னுரை - ஆதவன் தீட்சண்யா

“திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற முடியவில்லையே என்ற விரக்தி பெரும்பான்மை சமுதாய மக்களின் மனதில் இருக்கிறது . பிரதமர் வந்தப் பிறகாவ...