செவ்வாய், ஜனவரி 21

என் சமாதியில் நிற்கவும் அழவும் வேண்டாம் - மேரி எலிஸபெத் ஃப்ரைய்


என் சமாதியில் நிற்கவும் அழவும் வேண்டாம்
நான் அங்கு இல்லை,
 தூங்குவதும் இல்லை
நான் இருப்பது
 வீசுகின்ற ஆயிரம் காற்றுகளில்.

நான்
மிருதுவாக விழுகின்ற பனி
மென்மையான மழைப் பொழிவு
முதிர்ந்துகொண்டிருக்கும் தானியங்களின் வயல்
காலை நேர நிசப்தம்
வட்டமிட்டுப் பறக்கும் அழகிய பறவைகள்
 இரவு நேரத்தின் நட்சத்திர ஒளி
பூத்துக்குலுங்கும் மலர்கள்.

 நான் இருப்பது
நிசப்தமான அறையில்
 பாடுகின்ற பறவைகளில்
இனியவை ஒவ்வொன்றிலும்.
என் சமாதியில் நிற்கவோ அழவோ வேண்டாம்
நான் அங்கு இல்லை
 நான் இறப்பதில்லை.

தமிழில்: எஸ்.வி.ராஜதுரை



·  அமெரிக்கக் கவிஞர் மேரி எலிஸபத் ஃப்ரையின் ( Mary Elizabeth Frye -1905-2004)  இக்கவிதை,  தன் தாயை இழந்துவிட்டவரும் நாஜிகள் ஆட்சி செய்யும் ஜெர்மனிக்குத் திரும்பிச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டவருமான  ஒரு இளம் யூதப் பெண்ணுக்காக 1932இல் எழுதப்பட்டது. உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கானோரால் இக்கவிதை படிக்கப்பட்டு வருவதற்குக் காரணம் அவர்கள் தங்கள் துக்கங்களை இக்கவிதையின் மூலம் வெளிப்படுத்த முடிவதுதான். இக்கவிதையின் ஆங்கில மூலத்திற்கு: https://allpoetry.com/Mary-Frye

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...