திங்கள், ஜனவரி 2

வேண்டுதல்- ஆதவன் தீட்சண்யா

ப்பாவுக்கு வியாபாரம்
அம்மாவுக்கு மஞ்சள் குங்குமம்
அண்ணனுக்கு வேலை
அக்காவுக்கு வரன்
தம்பிக்கு படிப்பு

கோடுதாண்டாத வேண்டுதல்
எல்லோருக்கும்

முன்னிரவில் கூட்டமொழிய
ஊர்க்காக்கும் பெருமானை
உள்வைத்துப் பூட்டி கிளம்பினார் அர்ச்சகர்
காலைவரை
கதவு உடைக்கப்படாமல் இருக்கணுமென்று
நெஞ்சுருக வேண்டி.

2 கருத்துகள்:

  1. உள்வைத்துப் பூட்டி கிளம்பினார் அர்ச்சகர்
    காலைவரை
    கதவு உடைக்கப்படாமல் இருக்கணுமென்று
    நெஞ்சுருக வேண்டி.

    மிகச்சரியான உண்மை நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா... நம்மைப் படைத்தவரை நாம் படைத்தோம். நம்மைக் காப்பவரை நாம்தானே காக்க வேண்டும். :)

    பதிலளிநீக்கு

பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம் - சுஜாதா சிவஞானம் நூலுக்கான முன்னுரை - ஆதவன் தீட்சண்யா

“திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற முடியவில்லையே என்ற விரக்தி பெரும்பான்மை சமுதாய மக்களின் மனதில் இருக்கிறது . பிரதமர் வந்தப் பிறகாவ...