வியாழன், ஜனவரி 19

நியதி- ஆதவன் தீட்சண்யா

குழிக்குள் சவம்
குனிந்தேன் கடைசியாய் பார்க்க

பிணம் கெக்கலியிட்டது:
எனக்கேனும் இந்த இடம்
உனக்கு...?

ஆழத்தின் ஆழத்திலிருந்து இன்னொரு குரல்:
என்மீது யார் படுத்திருப்பதையும் அனுமதிக்கமுடியாது
எழுந்திரு

அச்சத்தில்
அவசரமாய் குழிதூர்த்து நிமிர்ந்தேன்
அதோ
மகனின் கொள்ளிச்சட்டியோடும்
கொள்ளுப்பேரன்களின் நெய்ப்பந்தங்களோடும்
பிணங்களின் நீளும் வருகை

அழவேண்டியிருக்கிறதே என்ற துக்கத்தில்
சுடலையின் எல்லையில் சில பெண்களும்

பாவம்
வெட்டியானுக்கும் மருத்துவச்சிக்கும்
விடுமுறையே கிடையாது.



1 கருத்து:

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...