புதன், ஜனவரி 1

என்வில்லும் அம்பும் - மார்ஷல் ஹெம்ப்ரோம்


இந்த நிலம்
குளம்
பண்ணை
நான் கட்டிய வீடு
எல்லாம் உண்மையில்
என்னுடையவை அல்ல என்று
நீ கூச்சலிடுகிறாய்
இவையனைத்தையும்
உடனடியாகக் கைவிட்டு
அறியாத இடமொன்றுக்கு
நான் போய்விட வேண்டுமென்று
நீ கோபத்துடன் கட்டளையிடுகிறாய்
கொடிகளுக்கும் மரங்களுக்கும்
இராச்சியமாக இருந்த
யாரும் வசிக்காத
அடர்ந்த காடாக இருந்தது
இந்த இடம்
உடலுழைப்பைக் கொண்டு
காடு திருத்தி
வாழ்வதற்கான ஒரு வீட்டைக் கட்டினேன்
மகிழ்ச்சியான ஓர் இல்லத்தை.
இந்த நிலமும்
குளமும் பண்ணையும் வீடும்
என்னுடையவை அல்ல என்று
நீ இப்போது கூறுவேயானால்
எனது வில்லையும் அம்பையும் எடுப்பதைத் தவிர
எனக்கு வேறு வழியில்லை.

தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உன்னிலை - ஆதவன் தீட்சண்யா

உன்னிலை பறவை உதிர்த்துப் போயிருந்த இறகொன்றின் தனிமை நெஞ்சையறுப்பதாய்   நெக்குருகி நீங்கள் புலம்பியழும் வேளையில் குட்டிபொம்மையைப் பற்றிப் பிட...