புதன், ஜனவரி 8

எதிரிக்கு... -ஆதவன் தீட்சண்யா

இறகின் மென்மையைக் கொண்டு
பறவையின் வலிமையை
எடை போடும் நீ
அவ்வாறே என் கோபத்தையும்
தவறாகக் கணிக்கிறாய்
எச்சரிக்கை மணியை
ஒலிக்கச்செய்த பிறகே
என் யுத்தம் தொடங்குமென எண்ணுகிறாய் போலும்
உன் அடிமைச்சேனையில்
திரள மறுத்தபோதே
தொடங்கிவிட்டது எனது யுத்தம்
வெறும் உடலெனத் துச்சமாய் எண்ணி தாக்கவரும் நீ
என் ஆயுதமும் அதுவேயெனக் காண்பாய்

06.01.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம் - சுஜாதா சிவஞானம் நூலுக்கான முன்னுரை - ஆதவன் தீட்சண்யா

“திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற முடியவில்லையே என்ற விரக்தி பெரும்பான்மை சமுதாய மக்களின் மனதில் இருக்கிறது . பிரதமர் வந்தப் பிறகாவ...