புதன், ஜனவரி 8

எதிரிக்கு... -ஆதவன் தீட்சண்யா

இறகின் மென்மையைக் கொண்டு
பறவையின் வலிமையை
எடை போடும் நீ
அவ்வாறே என் கோபத்தையும்
தவறாகக் கணிக்கிறாய்
எச்சரிக்கை மணியை
ஒலிக்கச்செய்த பிறகே
என் யுத்தம் தொடங்குமென எண்ணுகிறாய் போலும்
உன் அடிமைச்சேனையில்
திரள மறுத்தபோதே
தொடங்கிவிட்டது எனது யுத்தம்
வெறும் உடலெனத் துச்சமாய் எண்ணி தாக்கவரும் நீ
என் ஆயுதமும் அதுவேயெனக் காண்பாய்

06.01.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உன்னதபுரத்துக் கதைகள் - பிம்பம் ஷாகுல் / கட்டுரைத்தொகுப்பு/ அணிந்துரை - ஆதவன் தீட்சண்யா

ஒரு தனிமனிதரின் வாழ்வனுபங்கள் , அவரது வாழ்விடம் மற்றும் காலத்தின் வரலாற்றை நிறைவு செய்யும் பகுதியாக பொருந்திவிடுகிறது. அவ்வகையில் த...